பணிவு இல்லாத இடத்தில்
இறைவன் அருள் இருப்பதில்லை.
(எதுவாவது) செய் அல்லது (காலம்) செய்துவிடும் எதுவாவது.
12 முதல் 14 வயதிற்குள் குழந்தை தனது வேலைகளும், வீட்டு வேலைகளும் யாரையும் எதிர்பார்க்காமல் தானே செய்து கொள்ளும் வகையில் பெற்றோர்கள் தயார் படுத்த வேண்டும்.
உலகத்திலே யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் உங்கள் குழந்தை.
அதற்காக அதிகம் செல்லம் கொடுத்தால்,
நாளை உங்கள் குழந்தை சமுதாயத்தில் செல்லாக்காசாகி விடும்.
இனவிருத்தி செய்ய சொல்லிக்கொடுக்கும் திரைப்படங்களும், தொ(ல்)லைக்காட்சி தொடர்களும், அதை பெறுவதற்கு முன்பே அதை வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே ஊர் உருப்படும்.
நம்பிக்கையில் தொடங்கி,
எதிர்பார்ப்பில் பயணித்து,
ஏமாற்றத்தில் முடிவடைகிறது.
ஏமாற்றத்தில் சிக்கக் கூடாது எனில்,
எதிர்பார்ப்பில் சிக்கக் கூடாது.
எதிர்பார்ப்பில் சிக்கக் கூடாது எனில்,
எதன் மீதும் நம்பிக்கை வைக்காதே.
கடினம்தான்.
ஏனெனில் நம்பிக்கை பிறப்பதே
அன்பின் மூலம்தான்.
எளிதில் முடியக்கூடிய பிரச்சனைகளாக இருந்தாலும்,
அதை முடிக்கவிடாமல், தவறான யோசனைகளை
கூறி அரசனை தன்னிடம் எப்போதும் யோசனை
கேட்கும்படி பார்த்துக்கொள்வார் மந்திரி.
சுருக்கமாக கூறின் மன்னன் எப்போதும்
பிரச்சனையில் இருக்குப்படி பார்த்துக்கொள்வார்.
எவ்வளவு விலை உயர்ந்த
ஆட்டை பார்த்தாலும்
அவர் கண்களுக்கு அதன் அருமை
தெரியாது.
அது எத்தனை கிலோ தேறும்
என்றே நினைப்பார்.
அது போலத்தான்
சில மனிதர்களும்,
நம் அருமை தெரியாமல்,
புரியாமல் நம்மை கூரு போடுகிறார்கள்.
பணக்காரனுக்கு ஏதோ ஒரு வகையில் உதவியாளன்.
தன் வேலையை மட்டும் பார்த்தால் மட்டுமே,
அவன் மிகவும் உயர்ந்தவன்.
அதை விடுத்து மற்றவர்களின் விஷயத்தில்,
தேவையின்றி மூக்கை நுழைத்து,
அதை தன் முதலாளியிடம் ஒன்றுக்கு இரண்டாக
போட்டு குடுத்து, அதனால் தாம்
முதலாளியிடம் மிகவும் உயர்ந்து விட்டதாக
எண்ணம் கொண்டு பிழைப்பு நடத்தும் சாக்கடை புழுக்களுக்கு தெரியாது,
என்றுமே எச்சில் இலையில் தான் தம் வாழ்க்கை என்பது.
இப்படிப்பட்டவனுக்கு நிறைந்த, நிரந்தர முதலாளியும், வாழ்க்கையும்
என்றுமே கிடைக்காது.
இந்த எச்சில் இலை புழுக்களினால்
மற்றவர்களுக்கு எத்தனை எத்தனை பிரச்சனை.
இவைகளை நாம் எந்த சூழ்நிலைகளிலும்
நம் விஷயத்திலோ , வீட்டிற்குள்ளோ அனுமதிக்கவே கூடாது.
ஓடி ஒளிந்தவனெல்லாம்
ஆடிப்பாடுகின்றனர்.
ஜாதி(தீ), மதம் வெறி
தலைவிரித்து ஆடுகிறது.
காசுக்கும், பொட்டல பிரியாணிக்கும்,
கூட்டம் கூடுகிறது.
நடிகர்களை பார்க்க
கூட்டம் அலைமோதுகிறது.
தேசப்பற்றை யாரிடமும்
பார்க்க முடியவில்லை.
ஜாதி, மதம் பாராமல்,
வேட்பாளர்களை தேர்வு
செய்யாத வரை தேச நலன்
என்பது வெறுமையே...
இறுதியாக...
உங்களுக்கு என்ன வேண்டும் என
யாரும் கேட்கவில்லை. நான் வந்தால்
............................... என உளறி கொட்டி,
கிளறி மூடுவதையே பார்க்க முடிகிறது.
நீ இந்த பிறவியில் செய்த
பாவத்தின் கர்மாவின்
கூலியாக
உனக்கு ஆண்டவன்
பொருத்தமில்லா துணையை,
பொறுமையாக கொடுத்து
நீ படும் துன்பத்தை
நிதானமாக அழகு பார்ப்பார்.
அது இறைவனின் கடமை.
இது உன் கர்மாவின்
கூலி.
நம்பி, நம்பி,
ஏமாந்தது.
ஏமாந்தது.
ஏமாத்துது.
நம்பிக்கையே...
வெற்று காகிதத்தில்
எழுத்துக்கு பதில்
கண்ணீர் துளிகள்
மட்டுமே மிச்சமாய்
வேதனைகளின் எச்சமாய்...