Thursday 13 April 2023

பணிவு

 


பணிவு இல்லாத இடத்தில் 


இறைவன் அருள் இருப்பதில்லை.


Wednesday 25 January 2023

முட்டாள் விஜயன்

 

முட்டாள் 

அன்பு 

என்ற உணர்வினால் மேலும் முட்டாள் ஆகின்றான்.

Saturday 26 November 2022

குழந்தை வளர்ப்பு


 

12 முதல் 14 வயதிற்குள் குழந்தை தனது வேலைகளும், வீட்டு  வேலைகளும் யாரையும் எதிர்பார்க்காமல் தானே செய்து கொள்ளும் வகையில் பெற்றோர்கள் தயார் படுத்த வேண்டும்.
 

உலகத்திலே யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் உங்கள் குழந்தை.
 

அதற்காக அதிகம் செல்லம் கொடுத்தால்,

நாளை உங்கள்  குழந்தை சமுதாயத்தில் செல்லாக்காசாகி விடும்.
இனவிருத்தி செய்ய சொல்லிக்கொடுக்கும் திரைப்படங்களும், தொ(ல்)லைக்காட்சி தொடர்களும், அதை பெறுவதற்கு முன்பே அதை வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்தினால் மட்டுமே ஊர் உருப்படும்.

Monday 24 October 2022

முட்டாள்தனம்

 

முட்டாள்தனம், ஏமாளித்தனம் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.

முட்டாள்தனம் செயல்பட நம்பிக்கைத் துரோகம் மூலதனமாகிறது.

ஏமாளித்தனம் செயல்பட அன்பு மூலதனமாகிறது.

தகுதியற்றவர்களிடம் நாம் செலுத்தும் நம்பிக்கை, அன்பு
இரண்டுமே இவைகளை நமக்கு பரிசாக அளிக்கின்றன.

தீர்வு:
இந்த நொடியின் நடப்பு,
எனது கர்மாவின் செயல்
என ஏற்றுக்கொள்வதுதான்.

Sunday 26 September 2021

ஏமாற்றம்

 

 




நம்பிக்கையில் தொடங்கி,
எதிர்பார்ப்பில் பயணித்து,
ஏமாற்றத்தில் முடிவடைகிறது.

ஏமாற்றத்தில் சிக்கக் கூடாது எனில்,
எதிர்பார்ப்பில் சிக்கக் கூடாது.
எதிர்பார்ப்பில் சிக்கக் கூடாது எனில்,
எதன் மீதும் நம்பிக்கை வைக்காதே.

கடினம்தான். 

ஏனெனில் நம்பிக்கை பிறப்பதே
அன்பின் மூலம்தான்.

Tuesday 17 August 2021

மந்திரியின் தந்திரம்


 எளிதில் முடியக்கூடிய பிரச்சனைகளாக இருந்தாலும்,
அதை முடிக்கவிடாமல், தவறான யோசனைகளை
கூறி அரசனை தன்னிடம் எப்போதும் யோசனை
கேட்கும்படி பார்த்துக்கொள்வார் மந்திரி.
சுருக்கமாக கூறின் மன்னன் எப்போதும்
பிரச்சனையில் இருக்குப்படி பார்த்துக்கொள்வார்.

Monday 9 August 2021

கசாப்பு கடைக்காரர்

 


 

எவ்வளவு விலை உயர்ந்த
ஆட்டை பார்த்தாலும்
அவர் கண்களுக்கு அதன் அருமை
தெரியாது.
அது எத்தனை கிலோ தேறும்
என்றே நினைப்பார்.
அது போலத்தான்
சில மனிதர்களும்,
நம் அருமை தெரியாமல்,
புரியாமல் நம்மை கூரு போடுகிறார்கள்.

Monday 14 June 2021

காரியக் காதல்


நீ காதலிக்கும் போது
எதிர்கால திட்டத்திற்கு
நீ எத்தனை எத்தனை, 
என்ன என்ன நிபந்தனைகள் ,
திட்டங்கள் போட்டாலும்
எல்லாவற்றிற்கும் சம்மதம்
கூறும் எதிர் பாலினம்.
திருமணத்திற்கு பின்தான்...
அதன் உண்மையான
சுரூபத்தை காட்டும்.
அப்போதுதான் உனக்கு
புரியும்.
உன் கர்மா உன்னை நம்ப வச்சு... 
குதூகலிப்பதை.

Saturday 5 June 2021

மிக கேவலமான வாழ்க்கை



 

பணக்காரனுக்கு ஏதோ ஒரு வகையில் உதவியாளன்.
தன் வேலையை மட்டும் பார்த்தால் மட்டுமே,
அவன் மிகவும் உயர்ந்தவன்.

அதை விடுத்து மற்றவர்களின் விஷயத்தில்,
தேவையின்றி மூக்கை நுழைத்து,
அதை தன் முதலாளியிடம் ஒன்றுக்கு இரண்டாக
போட்டு குடுத்து
, அதனால் தாம் 
முதலாளியிடம்  மிகவும் உயர்ந்து விட்டதாக
எண்ணம் கொண்டு பிழைப்பு நடத்தும் சாக்கடை புழுக்களுக்கு தெரியாது,
என்றுமே எச்சில் இலையில் தான் தம் வாழ்க்கை என்பது.
இப்படிப்பட்டவனுக்கு நிறைந்த, நிரந்தர முதலாளியும், வாழ்க்கையும்
என்றுமே கிடைக்காது.

இந்த எச்சில் இலை புழுக்களினால்
மற்றவர்களுக்கு எத்தனை எத்தனை பிரச்சனை.
இவைகளை நாம் எந்த சூழ்நிலைகளிலும்
நம் விஷயத்திலோ , வீட்டிற்குள்ளோ அனுமதிக்கவே கூடாது.

Wednesday 31 March 2021

தேர்தல்களம்

 


 

ஓடி ஒளிந்தவனெல்லாம்
ஆடிப்பாடுகின்றனர்.
ஜாதி(தீ), மதம் வெறி
தலைவிரித்து ஆடுகிறது.
காசுக்கும், பொட்டல பிரியாணிக்கும்,
கூட்டம் கூடுகிறது.
நடிகர்களை பார்க்க
கூட்டம் அலைமோதுகிறது.
தேசப்பற்றை யாரிடமும்
பார்க்க முடியவில்லை.

ஜாதி, மதம் பாராமல்,
வேட்பாளர்களை தேர்வு
செய்யாத வரை தேச நலன்
என்பது வெறுமையே...


இறுதியாக...
உங்களுக்கு என்ன வேண்டும் என
யாரும் கேட்கவில்லை. நான் வந்தால்
............................... என உளறி கொட்டி,
கிளறி மூடுவதையே பார்க்க முடிகிறது.

Tuesday 29 December 2020

பொருத்தமில்லா துணை

 நீ இந்த பிறவியில் செய்த
பாவத்தின் கர்மாவின்
கூலியாக

உனக்கு ஆண்டவன்
பொருத்தமில்லா துணையை,
பொறுமையாக கொடுத்து
நீ படும் துன்பத்தை
நிதானமாக அழகு பார்ப்பார்.

அது இறைவனின் கடமை.
இது உன் கர்மாவின்
கூலி.
  

Saturday 3 October 2020

நம்பிக்கை துரோகம்

 


 

நம்பி, நம்பி,
ஏமாந்தது.
ஏமாந்தது.
ஏமாத்துது.
நம்பிக்கையே...
வெற்று காகிதத்தில்
எழுத்துக்கு பதில்
கண்ணீர் துளிகள்
மட்டுமே மிச்சமாய்
வேதனைகளின் எச்சமாய்... 

போராட்டம்

 


போராட்டமே வாழ்க்கை.
துன்பமே என்றும் துன்பமே.
இன்பம் என்பதே மாயை
என்றாகிப்போனது.
இறை வழிபாடே,
இறை சிந்தனையே
தற்போது
சிறிய ஆறுதல்.

Saturday 13 June 2020

ஆணவத்திற்கு கூலி

நாம் (ஆணவத்தால்) ஆடும் ஆட்டத்திற்கு,
காலம் ஒன்றே பதில் சொல்லும்.
காலம் முழுவதும் மனவேதனை
வாட்டியெடுக்கும்.

Monday 27 April 2020

ஈரோடு கொரானாவில் இருந்து விரைவாக மீண்டது எப்படி?



1.மக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் தவறாமல் கடைபிடித்தனர்.
(கடைபிடிக்காத ஒரு சில இடங்களில் விஷயம் தெரிந்தவர்கள் கடுமையாக கண்டித்தனர்)
முகக்கவசம் அணியாதவர்களை மக்கள் அருவருப்பாக பார்த்து விலகி சென்றனர்.
2.காவல்துறையினர் மிக மிக அயராது உழைத்தனர். எங்கும், எப்போதும் அவர்களே தெரிந்தனர்.
3.வெளியில் சுற்றி தெரிந்தவர்களை காவல்துறையினர் அன்பாக எச்சரித்து அனுப்பினர்.
4.ஊரடங்கின் போது பெரியார்நகரில் ஒரு காவலர் வந்து நின்று அங்கு இருந்தவர்களை வீட்டில் இருக்கலாம்ல என்று கூறிவிட்டு சிறிது நேரத்தில் தனக்கு தானே ஏதோ பேசிக்கொண்டிருந்தார். (கடைகள், வாகனங்கள், மக்கள் நடமாட்டம்) இயல்பு நிலை இல்லாத ஊரில் தனியே தொடர்ச்சியாக தன் பணியை செய்து கொண்டிருந்த அவர் எவ்வளவு மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பார் என யோசியுங்கள். உங்களுக்கே புரியும்.
5.துப்புரவு பணியாளர்கள் இதுவரை ஈரோடு மக்கள் கண்களில் பார்த்திராத நவீன கருவிகளில் அடிக்கடி நாள்தோறும் ஏரியா வாரியாக மருந்தடித்தனர்.( கொசு மற்றும் ஈக்கள் மிகவும் குறைந்தது )
6.செவிலியர்கள் விடாது பயணம் மேற்கொண்டதை பார்க்க முடிந்தது.
7.மருத்துவர்களை வெளியில் எங்கும் பார்க்கமுடியவில்லை. மருத்துவமனையிலேயே தங்கி கொரோனா நோயாளிகளை மீட்டுவருவதில் முழுமையாக பணியாற்றியதை பின்பு தெரிந்து கொண்டேன்.
8.மின் ஊழியர்கள் மின் வெட்டு ஏற்படாமல் மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டனர்.
9.கை தட்டி நன்றி தெரிவிக்கும் நேரத்தில் முதலில் ஆங்காங்கே மாடியில் கூச்சத்துடன் கை தட்ட ஆரம்பித்த ஈரோடு மக்கள் நேரம் ஆக ஆக அனைவரும் மாடியில் வந்து ஐந்தரை மணிவரை கை தட்டி நன்றி தெரிவித்த போதுதான் தெரிந்தது ஈரோட்டு மக்களின் நன்றி உணர்ச்சி எவ்வளவு என்று. (இந்த நிகழ்ச்சியை எந்த மீடியாவும் காட்டவில்லை)
10. காலை 6மணி முதல் 9மணிவரை அத்யாவசிய கடைகள் திறந்து வியாபாரம் காவல்துறையினரின் கண்காணிப்போடு நடந்தது. அதன்பின் மக்கள் வீட்டிற்குள் தங்களை அடைத்துக்கொண்டனர்.
11.விளக்கேற்றும் தினத்தில் மாடியில் தீபங்கள் மற்றும் மொபைல் வெளிச்சம் சுடர்விட்டு விளையாடியது.
ஒரு சில வீடுகளில் வெளியே கார்த்திகை மாத தீபங்கள் போல நிறைய ஏற்றிருந்தனர்.சிலர் தீபாவளிக்கு மீந்துபோன வானத்தில் வெடித்து வர்ண ஜாலங்கள் காட்டும் வாணவேடிக்கைகளை வெடித்தனர்.
12.மாவட்ட ஆட்சியர் கதிரவன் அவர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் தங்கள் கடமையை ஆச்சு பிசகாமல் மிக கடுமையாக போராடி ஈரோட்டை மீட்டனர் என கூறினால் மிகையாகாது.

இறுதியாக...
இந்த நிலை முடிந்து நாடு சகஜ நிலைக்கு திரும்பியதும், இதற்காக போராடிய காவலர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், மருத்துவர்கள், மின் ஊழியர்களுக்கு ஷிப்ட் முறையில் மாதம் ஒரு வாரம் சம்பளத்துடன், குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்து ஆறுமாதம் இவர்களை மனஇறுக்கத்தில் இருந்து விடுவித்து கடவுளாகிப்போன இவர்களை மீண்டும் மனிதனாக்குவேன். நான் பிரதமராகவோ, முதலமைச்சராகவோ அல்லது என் கையில் அதற்கு அதிகாரம் இருந்திருந்தால்... 

Sunday 29 March 2020

கிருமி

மனிதனின் அறிவியல் மமதைகள்
எங்கு சென்றன.

பணம் பணம் பணம் என
ஓடிய அனைவரும் வீட்டிற்குள்...

அடுத்தவன் குடியை அழித்து பொருள், பணம்
சேர்த்தவனும், கட்டு கட்டாய் பதுக்கியவனுக்கும்

தற்போது மருத்துவமும், காவல்துறையின்
பணியும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என
புரிந்திருக்கும்
.
பணத்திற்கு மேல் எதுவோ இருக்கிறது என்றால்
அது மனித நேயமே.

Thursday 7 November 2019

ஆண்கள் உயர்ந்தவர்கள்




பெண்களைவிட ஆண்
மிகவும் உயர்ந்தவர்கள்.
ஒரு விஷயத்தில்,
அதிகம் அழுதாலும்,
அவன் கண்களில் கண்ணீர் வருவதில்லை.

Sunday 6 October 2019

கடவுளின் கணக்கு


நாடி,நரம்பில் முறுக்கம்,
கை நிறைய காசு.
ஆணவத்தின் உச்சிக் கிளையில்
மாபெரும் ஆட்டம்.
இளமையில் ஆடும் ஆட்டம்
முதுமையில் தண்டனை வழங்குகிறது.
ஆண்டவன் போடும் முடிச்சை
அவரால் மட்டுமே அவிழ்க்க முடியும்.

Wednesday 22 May 2019

முதுமை


இளமையிலே சேமிக்காத பணம்
தண்ணீர் இல்லாத கிணறு போல்
வாழ்க்கை பயனற்றதாகி விடுகிறது.
முதுமையில் உறவென்று கூட்டமாய்
காக்கைகள் கூடாது.
முதுமை கொடியதாகி விடுகிறது.

Saturday 27 April 2019

இதுவும் ஒரு வகையான தியாகம்தான்

நான் வாழ வேண்டும் என நினைத்தால்,
எனக்கு துரோகம் இழைத்த பல பேர் நடுத்தெருவில்
நிற்க வேண்டி வரும்.
அதனால்தானோ என்னவோ நான் நடைபிணமாகவே
மரிக்க நினைக்கின்றேன்.

Tuesday 9 April 2019

கர்மாவின் வேலை


விஷநாகம் கொத்தினால் விஷமே.
நல்லபாம்பாக இருந்தாலும் சரி,
ராஜ நாகமாக இருந்தாலும் சரி,
அது விஷம்தான்.
நாகம் என தெரிந்தே கழுத்தில் போட்டுக்கொண்டு
ஆட்டம் போட்டால் உன் கதி அதோ கதிதான்.
கர்மா அதன் வேலையை நன்றாக செய்யும்.

Tuesday 5 March 2019

நகைச்சுவையின் முடிவு


நகைச்சுவை நடிகர் என்று
மற்ற நகைச்சுவை நடிகரைபோல்
நடிக்க ஆரம்பிக்கிறாரோ
அன்றே அவரிடம் நகைச்சுவை
தீர்ந்துவிட்டது என
பொருள்.

Wednesday 5 December 2018

கலியுக சுழற்சி



நாம் மற்ற உயிர்களுக்கு 

( தெரிந்தோ, தெரியாமலோ ) 

செய்த பாவங்கள், துன்பங்கள் கர்மாக்கள் தீரவும்,
 

கலியுகத்தின் எழுபது சதவீத சுழற்சிக்கு 

பெண்களின் வாய் முக்கிய பங்கு வகிக்கிறது.

Friday 9 November 2018

வக்கத்தவன்

வக்கத்தவனை தெரு நாய் கூட மதிக்காது.
ஏன் அவன் வீட்டு துடைப்பம் கூட மதிக்காது.
பூமியிலேயே நரகம் முழுமையாக அனுபவிப்பான்.
மரணமே அவனை விட்டு விலகிப்போகும்.

Saturday 27 October 2018

827 ஆபாச இணையதளங்கள் முடக்கம்! மத்திய அரசு அதிரடி



இணையத்தளத்தின் ஆபத்தை குறித்து
 (இணையதளம் பேராபத்து என 22 July 2017)
அன்றே எழுதியிருந்தேன். இன்று நான் பயந்தபடி அனைத்தும் நடந்துவிட்டன. தற்போது இந்த நடவடிக்கை(!). இனி என்ன பயன்?. சிறுமிகள் வன்கொடுமை,கள்ள காதல் (இதற்கு நீதிமன்றம் ஆதரவு வேற), ஆசிரியர் மாணவி,மேலும் பல. இதைத்தானே இந்த கார்ப்பரேட் அரசு எதிர்பார்த்தது. நன்றாக நடந்தது இப்போது முடக்கி என்ன பெரும் பயன் ஏற்பட்ட போகிறது?. மொத்த நாட்டிற்கும் அதன் கலாச்சாரத்திற்கும் சங்கு ஊதிவிட்டு இப்போது வெறும் முடக்கம்.

Friday 28 September 2018

ஏமாற்றம்


ஏமாந்தது உன் குற்றமே,
ஏமாற்றியவரின் குற்றம் அல்ல
அளவுக்கு மீறிய நம்பிக்கை
ஏமாற்றத்தில் தானே முடிகிறது.
இதற்கு தீர்வு நம்பிக்கையின் அளவை
நம் கட்டுப்பாட்டில் வைப்பதுதான்.

ஜனனம்


சற்று காலம் தங்கி போக வந்துள்ளோம்,
போகும் இடம் நன்கு தெரியும்.
வாழும் குறுகிய காலத்தில்,
போகும் நேரம் தெரியாததால்...
எத்தனை துன்பங்கள், எத்தனை இன்பங்கள்.

Monday 3 September 2018

சுவீகாரம்


குழந்தை இல்லையென ஏங்குவர்.
கோவில், குளங்களை சுற்றுவர்.
மருத்துவர்களுக்கு வாரி வழங்குவர்.
சுப நிகழ்ச்சி, சுப காரியங்களை தவிர்ப்பர்.
தம்பதியர் ஒருவரை ஒருவர் குறைகூறி
குடும்ப வெறுமையை அதிகமாக்குவர்.
ஆயிரக்கணக்கில் அனாதைக் குழந்தைகள்
இருந்தாலும் தத்தெடுத்து வளர்க்க
ஒன்றுக்கும் உதவாத சமுதாயத்தை கண்டு அஞ்சுவர்.
அனாதை குழந்தை எந்த ஜாதியோ? ரத்தத்தில் ஜா(தீ)தி!
குழந்தையும் தெய்வமும் ஒன்றென அறியவில்லை.

மனிதம் மரித்தது இந்த இடத்தில்.
சுவீகாரம் எடுத்தவர்களைக் கேளுங்கள்,
அவர்கள் பூமியில் வாழும் காலத்திலேயே
சொர்கத்தை அனுபவிப்பதை கூறுவார்கள்.

இவர்கள் அனுபவிக்கும் துன்பத்திற்கு
இவர்களே பொறுப்பு.

Friday 31 August 2018

காரியவாதிகள்



காரியவாதிகள் நட்பு என்னும் போர்வையில் 
தா(த)ன் காரியங்களை சாதித்து
கொள்கின்றனர். 
அவர்களை நண்பர்கள்
என நம்புவது
மிகுந்த ஏமாற்றத்தையும்,
தோல்வியையும்
நமக்குத் தரும். 
துரோகிகளிலேயே பெரிய துரோகி இவர்களே.

Monday 30 July 2018

அன்பு


உண்மையான அன்பை உணராமல்,
மாய உலகத்தில் சஞ்சரிப்பது
மீளா துன்பத்திற்கு வ(லி)ழி வகுக்கும்.
கர்மா என்றும் தன் கடமையை செய்யாமல்
விட்டதாக சரித்திரம் இல்லை.

Tuesday 17 July 2018

இங்கிதம்

இங்கிதம் என்பது தன்னடக்கத்தாலும்,
மற்றவரை மதிக்கத் தெரிந்தவர்களிடம்
இருந்து வருவது.
இங்கிதம் இல்லாதவர்களால் பிறர்க்கு
என்றுமே பிரச்சனைதான்.

Sunday 3 June 2018

மிகப்பெரிய சாதனையாளர்

மிகப்பெரிய சாதனையாளர் ஆக வேண்டும், 
சாதிக்கவேண்டும் என எண்ணினால்
கண்டிப்பாக திருமணம் செய்யக்கூடாது.


ஒரு வேலை திருமணம் செய்திருந்தால்
மிகப்பெரிய சாதனையாளர் ஆக வேண்டும் 

என்ற எண்ணம் கூடவே கூடாது.
அதையும் மீறி முயற்சி செய்வது இரு தலை கொண்ட பாம்பின்
வாழ்க்கைக்கு சமம்.