மாமியார் "மருமகளே எனக்கு பேரனை பெற்றுகொடு".
அம்மாவோ எனக்கு பொண்ணுதான் வேண்டும்.
கணவனோ "எனக்கு இரட்டைக்குழந்தைகள் ".
நம் கையில் என்ன இருக்குது.எல்லாம் கடவுள் செயல்.
* ஆண் குழந்தை பிறந்தால் வாழ்வை ரசிக்கலாம் .
* பெண் குழந்தை பிறந்தால் வாழ்வை ருசிக்கலாம்.
மகனின் பேண்ட்,டி சர்ட் எல்லாம் அப்பா போட்டுகொண்டு வலம் வருவார்.
தாயின் உடைகளை மகள் அணிந்து மகிழ்ச்சி கொள்வாள்.
மேலும் போட்டிக்கு வருவாள்.
ஆண் வாரிசுக்கு உடை வகைகள் குறைவு.வாங்கி கொடுத்து ரசிக்க முடியும்.அவ்வளவுதான்.
பெண் வாரிசுக்கு உடை வகைகள்,மிக அதிகம்.தலைமுடிக்கு மாட்டும் அணிகலன்கள் முதல் காலுக்கு அணியும் செருப்பு வரை.
இன்று ரோஜாபூ, நாளை மல்லிகை, நாளை மறுநாள் முல்லை,
ஜாதிமல்லி வகை வகையாய்.
பெற்றோரின் மகிழ்ச்சி குழந்தைக்கு வகை வகையாய் அணிவித்து அழகு பார்த்து
மகிழ்ச்சியடைய
பெண் குழந்தையே கொடு இறைவா...
ஆணுக்கு எல்லாம் ஒன்றுதான்.
பெண்ணுக்கு எல்லாம் இரண்டு.
பெயர் முன் போடும் இன்சியல் ,ஜாதகம், உடை பல பல .
ஆணை விட பெண்ணே உயர்ந்தவள்.
மகளாக, மனைவியாக, மருமகளாக, தாயாக, மாமியாராக, பாட்டியாக
பெண்ணுக்கு கடமைகளும், பொறுப்புகளும் மிக மிக அதிகம்.
எதையும் தட்டிகழிக்க முடியாது. சகித்துத்தான் போகவேண்டும்.
ஆண் சாமர்த்தியமாக அனைத்திலிருந்தும் ஒதுங்க முடியும்.
வாழ்க்கைக்கடலில்
குடும்பப் படகில் கணவன். உடல் ரீதியாக வலிமைமிக்கவன்.
துடுப்பாய் மனைவி.
படகை செலுத்தியவன் அவனாக இருந்தாலும்,
அவன் பிடித்த மீன் குஞ்சுகளோடு (குழந்தைகள்)
கரைசேர உதவியவள் மனைவியே.
அவளே பெண்.
ஆண் ON ஆக இருக்க வேண்டும்.(செயல்,உழைப்பு)
பெண் pen ஆக இருக்க வேண்டும்.(படிப்பு,எழுத்தறிவு)
No comments :
Post a Comment