Friday 13 January 2012

ஆஸ்துமா




மானிடபிறவி ஒன்று விதி முடிந்து எமலோகம் வந்தது.

அங்கு
..


எமதருமராஜா
:
"சித்திரகுப்தா
இந்த ஆத்மா செய்த பாவங்கள் என்ன ?.
படி" என்றார்.


சித்திரகுப்தன்:
"தருமராஜா
ஏகப்பட்ட புத்தகங்கள் உள்ளன இவர் பெயரில்.
இவர் செய்த பாவங்கள் கணக்கில் அடங்காதவை.நீங்களே பாருங்கள்" என்று அனைத்து புத்தகங்களையும் காட்டினார்.

எமதருமராஜா
:

அனைத்தையும் பார்த்த எமதர்மராஜா உடனடியாக
"இந்த ஆத்மாவை நான் மீண்டும் மானிடனாக படைக்க உத்தரவிடுகிறேன்" என்றார்.

சித்திரகுப்தன்
:
"அரசே
அரிது அரிது மானிடனாக பிறத்தல் அரிது என்பது
தங்களுக்கு தெரியாதா?.
அப்படிப்பட்ட பிறவியை இந்த ஜீவனுக்கு
நீங்கள் தந்தால் தவறான நீதி தந்தவர்களாவீர்.
உங்கள் தருமம்
போய்விடுமே".

எமதருமராஜா
:

"சித்திரகுப்தா
நான் மானிடப்பிறவியோடு
ஆஸ்துமா நோயையும் கொடுக்கப்போகிறேன். இந்த ஜீவன் வாழ வேண்டும் என நினைக்கும். ஆனால் வாழ முடியாது. சாக வேண்டும் என நினைக்கும். ஆனால் சாவு வராது. இழுத்து, இழுத்து, இழுத்து, இழுத்து மூச்சுக்காக பூமியிலேயே நரகத்தை அனுபவிக்கும். இது நம் நரகத்தை விட கொடுமையாக இருக்கும். எப்படி நம் தண்டனை?".

சித்திரகுப்தன்
:

"மன்னா
! ஒரு வேளை இந்த ஜீவன் மருத்துவம் பார்த்து
தப்பித்து விட்டால்"?

எமதருமராஜா:
"மருத்துவத்தால்
தள்ளிப்போடலாம்.

முழுமையாக குணப்படுத்த முடியாது.
யோகா,பிராணயாமம்,நல்ல பழக்கவழக்கம், லாகிரி வஸ்துக்கள் இல்லாமை போன்றவற்றால் இந்த நரக வேதனையில் இருந்து விடுபடலாம். ஆனால் இந்த ஜீவன்களுக்கு தெரிந்தாலும் செய்யாது. நரக வேதனையை அனுபவித்து உயிரை விடும்".

***ஆஸ்துமா
தொட்டால் ஒட்டிக்கொள்ளாது.
***
***ஆஸ்துமா
இரத்த சம்பந்தத்தால் வருவது.***

***இவர்கள்
இரத்ததானம் தரக்கூடாது.
***
***இவர்களுக்கு பரிவும்,பாசமும் அவசியம் தேவை. ***
***இவர்கள்
கடும் மகிழ்ச்சியோ, மன உளைச்சலோ
அடையக்கூடாது.***


ஏனெனில்
இவர்கள் ஏற்கனவே நரகத்தை அனுபவிப்பவர்கள்.

Thursday 12 January 2012

காசில்லாதவன்

நம்பி ஏமாந்தது காசில்லாதது ஆகிறது.
காசில்லாதது குடும்பம் அதை மதிப்பதில்லை.
குடும்பம்
அதை மதிக்காததால்
அது தரித்திரம் அடைகிறது.

"தரித்திரம் பிடித்ததை கட்டிக்கிட்டு ஏமாந்து போய்டேன் "

என்ற சொல்லும் கிடைகிறது.
பழையது மறக்கிறது.
புதியது கண்ணை மறைகிறது.
ஏமாந்தது
யாரும் அல்ல.
ஏமாத்தியது விதி.
அதுவே கர்மா.....

Monday 2 January 2012

தவறு

அழிந்தவைகளைக் கண்டு
அழியாதவை
அழிகின்றன.

(விடலைகள் இணையதளத்தின்
பயன்பாட்டை அறியாமல்,
புரியாமல்,உணராமல்
தவறாக பயன் படுத்துவதை
குறித்த குறிப்பு.)

நீர்க்குமிழி



வெளியில் இருந்த காற்றை உள்வாங்கி

சிறிது
நேரத்துக்குள் எத்தனை

ர்
ஜாம்.

உன் நேரம் முடிந்ததும்
மீண்டும் காற்றோடு காற்றாய்....

நீயும் என்னை போல்தானா..?