மானிடபிறவி ஒன்று விதி முடிந்து எமலோகம் வந்தது.
அங்கு..
எமதருமராஜா:
"சித்திரகுப்தா இந்த ஆத்மா செய்த பாவங்கள் என்ன ?.
படி" என்றார்.
சித்திரகுப்தன்:
"தருமராஜா ஏகப்பட்ட புத்தகங்கள் உள்ளன இவர் பெயரில். இவர் செய்த பாவங்கள் கணக்கில் அடங்காதவை.நீங்களே பாருங்கள்" என்று அனைத்து புத்தகங்களையும் காட்டினார்.
எமதருமராஜா:
அனைத்தையும் பார்த்த எமதர்மராஜா உடனடியாக
"இந்த ஆத்மாவை நான் மீண்டும் மானிடனாக படைக்க உத்தரவிடுகிறேன்" என்றார்.
சித்திரகுப்தன்:
"அரசே அரிது அரிது மானிடனாக பிறத்தல் அரிது என்பது தங்களுக்கு தெரியாதா?.
அப்படிப்பட்ட பிறவியை இந்த ஜீவனுக்கு நீங்கள் தந்தால் தவறான நீதி தந்தவர்களாவீர்.
உங்கள் தருமம் போய்விடுமே".
எமதருமராஜா:
"சித்திரகுப்தா நான் மானிடப்பிறவியோடு ஆஸ்துமா நோயையும் கொடுக்கப்போகிறேன். இந்த ஜீவன் வாழ வேண்டும் என நினைக்கும். ஆனால் வாழ முடியாது. சாக வேண்டும் என நினைக்கும். ஆனால் சாவு வராது. இழுத்து, இழுத்து, இழுத்து, இழுத்து மூச்சுக்காக பூமியிலேயே நரகத்தை அனுபவிக்கும். இது நம் நரகத்தை விட கொடுமையாக இருக்கும். எப்படி நம் தண்டனை?".
சித்திரகுப்தன்:
"மன்னா! ஒரு வேளை இந்த ஜீவன் மருத்துவம் பார்த்து தப்பித்து விட்டால்"?
எமதருமராஜா:
"மருத்துவத்தால் தள்ளிப்போடலாம்.
முழுமையாக குணப்படுத்த முடியாது.
யோகா,பிராணயாமம்,நல்ல பழக்கவழக்கம், லாகிரி வஸ்துக்கள் இல்லாமை போன்றவற்றால் இந்த நரக வேதனையில் இருந்து விடுபடலாம். ஆனால் இந்த ஜீவன்களுக்கு தெரிந்தாலும் செய்யாது. நரக வேதனையை அனுபவித்து உயிரை விடும்".
"மருத்துவத்தால் தள்ளிப்போடலாம்.
முழுமையாக குணப்படுத்த முடியாது.
யோகா,பிராணயாமம்,நல்ல பழக்கவழக்கம், லாகிரி வஸ்துக்கள் இல்லாமை போன்றவற்றால் இந்த நரக வேதனையில் இருந்து விடுபடலாம். ஆனால் இந்த ஜீவன்களுக்கு தெரிந்தாலும் செய்யாது. நரக வேதனையை அனுபவித்து உயிரை விடும்".
***ஆஸ்துமா தொட்டால் ஒட்டிக்கொள்ளாது. ***
***ஆஸ்துமா இரத்த சம்பந்தத்தால் வருவது.***
***இவர்கள் இரத்ததானம் தரக்கூடாது. ***
***இவர்களுக்கு பரிவும்,பாசமும் அவசியம் தேவை. ***
***இவர்கள் கடும் மகிழ்ச்சியோ, மன உளைச்சலோ அடையக்கூடாது.***
ஏனெனில் இவர்கள் ஏற்கனவே நரகத்தை அனுபவிப்பவர்கள்.
4 comments :
அன்புறவே சுப்பர்(பிரமாதம்) இடுகை. தலைப்பு அதைவிட சுப்பர் (பிரமாதம்) எப்படி இப்படி ஒரு கற்பனை வந்தது. வாழ்த்துகள்! வாழ்த்துகள்!
வேதா. இலங்காதிலகம்.
i shared this to my face book wall. Thank you.
Vetha.Elangathilakam.
மிக நல்ல பதிவுகள். அனுபவித்து படித்தேன்.
ஆஸ்த்மாபற்றி எழுதப் பட்டதை , அனுபவித்தவர்கள் , படித்தால் ஆறுதல்!
அந்த அவஸதையை ஆண்டவன் தான் போக்கலாம்.
நன்றி.
என் பதிவை படித்து கருத்திட்டமைக்கு
மனமார்ந்த நன்றி.
கடவுள் என்றும் துணை இருப்பார்.
http://dooritwilldo.blogspot.com
Post a Comment