Friday 30 March 2012

ஆத்மாவின் உரைகள்

உணர்வால் உயிர்ப்பித்து
உள்ளதால் எந்த பலனும்
எதிர் பார்க்காமல்,அடக்கத்துடனும்,
பணிவுடனும் வாழ்ந்தால் மரியாதையும்
மதிப்பும் தன்னால் வந்து ஒட்டிக்கொள்ளும்.

பாசம்/கோபம்

அதிகமாக பாசம் வைத்தால் கண்டிப்பாக
ஒரு நாள் வழுக்கிவிடும்.ஹெல்மெட் போட்டிருந்தாலும்

மண்டையும்,இதயமும் நொறுங்கிவிடும்.
அதிக கோபம் ஒரு வகையான வெறி நோய்.
இது வெறி நாய் கடித்து வரும் நோயை விட கொடுமையானது.
இதைதான் படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார்
"அதிகமா ஆசைப்படற ஆம்பிள்ளையும்,
அதிகமா கோபப்படுகிற பொம்பளையும்
நல்ல வாழ்ந்ததா சரித்திரமே இல்ல " பன்ச் சொன்னாரோ !.

Sunday 18 March 2012

வாய்க்கரிசி

பசி பசி என அலறி துடிதுடித்து இறந்தவனுக்கு,
எல்லா உறவினர்களும் ஒற்றுமையாய்
அரிசி போட்டனர் அவன் வாயில்.
அவன் இருக்கும் வரை அவன் சொத்தை ஏமாற்றித்தின்ற
பிணந்தின்னிக்களுகுகள்.

Tuesday 13 March 2012

சக்கரச்சுழற்சி

முடியும் நேரத்தில் தொடக்கத்தை தேடுவது,
தொடங்கியதும் (தொடங்கியதே தெரியாமல்) விரைவாக முடிவைத் தேடுவது,
இடைப்பட்ட நேரத்தில் மற்றவர்களை சுழலவைப்பது.
சுழற்சியில் மாட்டுவது.முடிந்தால் தப்பிப்பது.
முடியாவிட்டால் சுழன்று சுழன்று அல்லல்படுவது.
இறை அருள்ளாலும்,
மூதாதையர்,நல்லோர்,பெரியோர் ஆசியினாலும்
கரையேறுதல் நடைபெறுகிறது.
வாழ்க்கைச்சக்கரம் சுழற்சியில் ஏமாந்தால்
வலுக்குமரமாகிவிடும்.

Saturday 3 March 2012

கலியுக மன்னர்கள்

கசாப்பு கடைக்காரர் ஒரு ஒரு உயிராக போகடிக்கிறார்.
ஆனால் மரம் வெட்டுபவரோ
பல எதிர்கால தலைமுறைகளுக்கு சவக்குழி தோண்டுகிறார்.
மரமே பூமிக்கு அஸ்திவாரம்.
இருவருமே தன் தொழிலை வயிற்றுப் பொழப்புக்காக
செய்வதாக நியாயப்படுத்துகின்றனர்.
தன் வயிற்றுக்காக பெரும் பாவம் செய்யும் இவர்கள்
கலியுக மன்னர்கள்.