Thursday 4 April 2013

காதல் பிரசவம்



காதலை வெளிப்படுத்தும் போது இருந்த 
              பரவசமான பயம்,
 

காதலை தடுக்கவரும் வில்லன்களை எதிர்க்க 
              காத்திருந்த வீரம்,
 

தலைப்பிரசவத்தின் போது மருத்துவர் கையெழுத்து வாங்கும்போது            
               நடுங்கிய கைகள்,
 

சரிவர பேசாத, பழக்கம் இல்லாத மாமியாரும் காத்திருக்கும் போது 
                உறுத்திய குற்ற உணர்வுகளும்,

பிரசவமாகி மனைவியாகிய காதலியை பார்க்கும்வரை 
                தளர்ந்த கால்களும்,வரண்ட நாக்கும், படபடத்த  நெஞ்சும்,

மனைவியையும்,குழந்தையையும் ஆரோக்கியமாக பார்த்த பொழுது 

                                        
காதல் பிரசவித்த காதல் 


ஆனந்த கண்ணீ ரின் இடையே கடவுளாக தெரிந்தது. 

No comments :