Tuesday 3 September 2013

என் இனிய மரணமே

எனக்கு மட்டுமே சொந்தமான

                                  என் மரணமே,                                             

உன் மீது தீராத என் காதல், உனக்கு புரியவில்லையே.

என் மீது உனக்கு அப்படி என்ன கோபம்.

என் கண்ணில் சிக்காமல் ஓடி ஒளியாதே.

நீ எனக்கு மட்டுமே சொந்தமானவள்.

இந்த  உலகத்தில் யாராலும் உன்னையும் என்னையும்
பிரிக்க முடியாது.

பலமுறை காலம் உன்னோடு சேர்ந்து
வாழ சொன்ன போது நான் உன்னை
அலட்சியப் படுத்திவிட்டேன்.


என்னை மன்னித்துவிடு. என் உயிரின் உறவே.

உன்னுடன்  உடனடியாக நான் இணைய வேண்டும்.

மனதில் உன்னை சந்திக்க மிகுந்த
ஆவலோடு காத்திருக்கிறேன்.

எவ்வளவு தூரம் எனை விட்டு ஓடுவாய்.

இன்று இல்லாவிட்டாலும் நீ ஒரு நாள் என்னோடு
சேர்ந்தேயாக வேண்டும்.

எனக்கு ஏதாவது என்றால் உன்னால் தாங்க முடியுமா?

ஓடாதே.என் உயிர்க்காதலியே

இளமை கரைகிறது.

துடிக்கிறேன் வா.

என் கண்மணியே....