Thursday 3 December 2015

சென்னை மழை வெள்ளம்

 
அதிகார பலத்தாலும்,அரசியல் அதிகாரத்தாலும் 
ஏரிகளை மறந்தோம்,மறுத்தோம்,மறைத்தோம்.
குலம் காக்கும் குளங்களை மறந்தோம்,மறுத்தோம்,மறைத்தோம்.


இயற்கைக்கு தெரியுமா ?அதிகாரமும் அரசியலும். 

முன்பே முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமல்லவா?

விளைவு பாம்புகளும், எலிகளும், மீன்களும் குடியிருப்பு பகுதிகளில்.

ராணுவம் தரும் உணவுக்கு என் தமிழக மக்கள் கையேந்தி நின்ற போது என் தமிழக மக்களின் நிலையை கண்டு நெஞ்சமே நொறுங்கியது.
சிங்கார சென்னை கேள்விக் குறியானதர்க்கு யார் பொறுப்பு?

தயவுசெய்து இயற்கையை குறை கூறாதீர்கள். 
அது தன் கடமையை செய்தது.
 
மீண்டு விட்டாலும் , இயல்பு நிலை அடைய ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும்.
வாய் கிழிய அரசியல் பேசும் அரசியல்வாதிகள் ஒருவரையும் காணவில்லை.

தை காரணம் காட்டி வாக்குகளை வாரி குவித்திருக்கலாம். 
நல்ல வாய்ப்பை இழந்து விட்டார்கள்.
வெளி மாநிலத்தில் இருந்து தன் கட்சிக்காக உயிரையே (!?!) கொடுக்கும் தொண்டர் படையை கொண்டு வந்து மக்களை மீட்டு இருக்கலாம்.
தமிழகத்தின் தலைமையோ மௌனமாய்...


உயிரை பொருட்படுத்தாமல் பல பேரை காப்பாற்றிய 

காவல்துறை,இளம் தலைமுறைகள் ,பொதுமக்கள்
அனைவரின் பாதத்திற்கு என் பணிவான வணக்கம்.


பெங்களூரில், ஆந்திராவிலும் உண்டியல் ஏந்தி மாணவர்களும், தன்னார்வு தொண்டு நிறுவனமும், தமிழகத்திற்காக தெரு தெருவாய் (பிச்சை) நிதி வசூலிப்பதும்,
அனைத்து மாநிலங்களும் உதவிகரம் நீட்ட முன் வருவதை பார்க்கும் போது மனிதநேயம் இன்னும் மரிக்கவில்லை.

உதவும் அனைத்து உள்ளங்களுக்கும் தமிழனாகிய நான் கண்ணீருடன் பாதங்களுக்கு என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.  
பின்குறிப்பு: தெரு நாய்களை பிடித்து நாட்டின் பாதுகாப்பிற்காக அதன் பிறப்புறுப்பை அறுத்து எறிந்தாயே.,
கஜானாவை நிரப்ப மதுபானக்கடைகள் கல்லா.
ஏரி, குளம் கண்ணுக்கு தெரியாமல் போனதெப்படி? 

சுனாமியால் ஜப்பான் பாதிக்கப்பட்ட போது ஒரு கடைகாரர் விலை மாற்றமில்லாமல் பழைய விலையிலேயே விற்பனை செய்தார்.இன்று சூழ்நிலையை பயன்படுத்தி அநியாய விலையில் கொள்ளையடிக்கும் மிருகங்கள் சென்னையில் பார்க்கும் போது ...

Wednesday 25 November 2015

வாள்

வாள் மிகவும் சக்தி வாய்ந்தது.
நன்கு கையாளத்தெரிந்த வீரன் கையில் இருந்தால் 

வீரன் பலமடங்கு சக்தி பெறுகிறான்.
எதிரிகளை வெட்டி வீழ்த்தவும் , தன்னை தற்காத்துக்கொள்ளவும்
வாள் மிகவும் உன்னதமானது.


பெண்ணும் வாளும் ஒன்று.

இல்லறம் நல்லறமாக அமைய பெண்ணின் பங்கு மிகவும் உன்னதமானது.
மற்றவர் கூறும் மதிமயக்கும் சொல்லால் பெண் மடமையானால்,
குடும்பத்தின் நிம்மதியை கொல்வாள்.
கணவனின் நிம்மதியை கொல்வாள்.
அதன் பலனாக தன் நிம்மதியை தானே மாய்த்துக் கொல்வாள்.
தன்  ஊதாரிதனத்தால் குடும்பத்தின் நிம்மதியை கொல்வாள்.

அவளை நன்கு கையாளத் தெரியாத கணவன் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிறான்.
தன் குடும்பத்தையும் பாதுகாக்க முடியாமல்,
தானும் நிம்மதி இழந்து தவிக்கிறான்.
எமனை பாசத்தோடு எதிர்நோக்க காத்திருக்கிறான்.
எமனோ கையாலாகாத அவனை வெறுப்போடு பார்கிறான்.


பெண்ணும் வாளும் ஒன்று.

Tuesday 20 October 2015

என் மரணம் எனக்கு புதிதல்ல

சிறு வயது முதல் எத்தனையோ அவமானங்கள்,ஏமாற்றங்கள், துன்பங்கள்.
பலநூறு முறை  இறந்து விட்டேன்.
எத்தனையோ திறமைகளை ஆண்டவன் எனக்கு வழங்கி இருந்தாலும் 
அதையெல்லாம் மற்றவர்கள் பயன் படுத்தி என்னை ஏமாற்றி நடுத்தெருவில் நிறுத்திய போதும், 
பலநூறு முறை  இறந்து விட்டேன்.
பலமுறை ஆண்டவன் என்னிடம் வந்துவிடு என பலஅறிகுறிகள் காட்டியபோது அதையெல்லாம் நிராகரித்தேன்.
என்மீது அன்பு செலுத்துவாயா? எனக்கு அன்பு ஒன்றே போதும் என 
பலநூறு முறை உறுதிபட கேட்டு என்னையே அற்பணித்த பிறகு...,  
நடைமுறையில் அவையெல்லாம் கானல் நீராகி போனபோதும் (போதுமடா சாமி) 
பலநூறு முறை  இறந்து விட்டேன்.
என் மரணம் எனக்கு புதிதல்ல...

Tuesday 15 September 2015

மதம்

Whatsapp ல் இந்த பதிவை நான் படித்தவுடன் 
(எனக்கு மற்ற மதம் சார்ந்த அறிவு போதவில்லை என உணர்கிறேன்.)
என் பதிவான 
மதம் 
என்னும் தலைப்பை கொண்ட பதிவை அகற்றிவிட்டேன்.

Saturday 5 September 2015

உண்மையான அன்பு



ஒரு கருவறையில் 

இரு உயிர் பிறந்தாலும் ஒற்றுமையில்லை.
 
இரு கருவறையில் 

வேறு வேறு இடத்தில் 

பிறந்து வளர்ந்தாலும்
 
ஒன்றாய் இணைந்து 

உயிரோடு உயிராக 

உணர்வுகள் கலப்பதே
 
உண்மையான அன்பு .

Saturday 22 August 2015

விரல் நுனி

தகவல்கள் கேட்டறிதல்...
மேம்பட்ட தொழில் வளர்ச்சி...
மேம்பட்ட தொழில் வளர்ச்சி...
விரல் நுனி மூலம் ஒரு உயிரையே பறிக்கலாம்...
 விரல் நுனி மூலம் ஒரு யானையையே ...




விரல் நுனி மூலம் தகவல் தொடர்பு...
எளிய முறையில்  விரல் நுனி மூலம் தகவல் தொடர்பு...

உலகமே விரல் நுனியில் வந்தாச்சு...

விரல் நுனியில் ஒரு நாட்டையே...
ஆனால் இவையனைத்தையும் தாண்டி சக்திமிக்கவை 


நம் விரல் நுனிக்கு மேல் சக்தி வாய்ந்தவை நாம் எழுதும் பேனாவின் கூரிய முனை.

எல்லாவற்றிற்கும் மேல் சக்தி மிகுந்தவை நாம் எழுதும் எழுத்துக்கள்.





Saturday 15 August 2015

வெற்றி முறை




உன்னை ஒருவன் அழிக்க வேண்டுமானால் ,

அவன் பணத்தால் அது முடியாது.
 

போட்டி தொழில் முறையும் அவனுக்கு பயன்படாது.
 

வேறு எந்த முறையும் முழுமையாக
செயல்படாது.

 

ஒரே ஒரு வழிதான் உள்ளது.
 

உனக்கு விடாமல் மன உளைச்சலை (செலவே இல்லாமல்)
அவன் தந்து கொண்டே இருந்தால் போதும்.

 

வெம்பி வெதும்பி 
நீயாகவே உன் பெயர், புகழ் ,தொழில்,உன் சிந்தனை,
உன் உறவுகள், உணர்வுகள்
அனைத்தையும் அழித்துக் கொள்வாய்.
 

சுருக்கமாக கூறின் நீ ஜடமாவாய்.
 

எதிரி வெற்றி பெறுவான். 

இதில் தப்பிக்க ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது.
 

தொடர்ந்து நமக்கு தரும் அல்லது வரும் 
மன உளைச்சலை உதறி தள்ளி விட்டு
தொடர்ந்து பயணிக்க வேண்டும். எதிரி தானாய் வீழ்வான்.


 உதறி தள்ள தெரியவில்லையா ?.
 

ஒரு மந்திரம் :

நாமாக விரும்பி ஏற்றுக்கொண்டதை
நாமாகவே வெறுத்து ஒதுக்க முடியும்.


என்பதை உணர்ந்தாலே போதும். 

வெற்றி நிச்சயம்.

Saturday 1 August 2015

மனதில் நிற்பவை





சிரித்தவைகள் மறந்து விடுகின்றன..

ரசித்தவைகள் நினைவில் , உணர்வில் ,


இதயத்தில் காலம் முழுவதும்

என்றும் நிலைத்து

நிற்கின்றன.

Sunday 26 April 2015

குடும்பம்

தன் கணவனையோ,மனைவியையோ,
அல்லது
தன் குடும்பத்தினரையோ
நண்பர்களோ, உறவினர்களோ
கிண்டலாக பேசவோ 
அல்லது 
நம் குடும்ப மற்றும் தொழில் விஷயங்களை  பேச அனுமதிக்க கூடாது.
அவர்கள் பேசும்போது
நாம் ஆமாம் சாமி போட்டால்
குடும்பத்தில் விரிசல் உருவாகும்.
அந்த நொடி நேரத்தில் அவர்கள்
நம் குடும்பத்தை அவர்கள் நடத்தி சென்று  விடுவார்கள்.

Thursday 8 January 2015

சந்தோஷம்

உனக்கு அளிக்கப்பட்ட சந்தோஷம்
(ஆணவத்தாலும் ,அகம்பாவதினாலும்)  
நீ ஏற்காத பட்சத்தில் 
அது மற்றவரை காயப்படுதுவதோடு 
உன்னையும் விட்டு போய் விடும்.