Thursday 3 December 2015

சென்னை மழை வெள்ளம்

 
அதிகார பலத்தாலும்,அரசியல் அதிகாரத்தாலும் 
ஏரிகளை மறந்தோம்,மறுத்தோம்,மறைத்தோம்.
குலம் காக்கும் குளங்களை மறந்தோம்,மறுத்தோம்,மறைத்தோம்.


இயற்கைக்கு தெரியுமா ?அதிகாரமும் அரசியலும். 

முன்பே முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமல்லவா?

விளைவு பாம்புகளும், எலிகளும், மீன்களும் குடியிருப்பு பகுதிகளில்.

ராணுவம் தரும் உணவுக்கு என் தமிழக மக்கள் கையேந்தி நின்ற போது என் தமிழக மக்களின் நிலையை கண்டு நெஞ்சமே நொறுங்கியது.
சிங்கார சென்னை கேள்விக் குறியானதர்க்கு யார் பொறுப்பு?

தயவுசெய்து இயற்கையை குறை கூறாதீர்கள். 
அது தன் கடமையை செய்தது.
 
மீண்டு விட்டாலும் , இயல்பு நிலை அடைய ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும்.
வாய் கிழிய அரசியல் பேசும் அரசியல்வாதிகள் ஒருவரையும் காணவில்லை.

தை காரணம் காட்டி வாக்குகளை வாரி குவித்திருக்கலாம். 
நல்ல வாய்ப்பை இழந்து விட்டார்கள்.
வெளி மாநிலத்தில் இருந்து தன் கட்சிக்காக உயிரையே (!?!) கொடுக்கும் தொண்டர் படையை கொண்டு வந்து மக்களை மீட்டு இருக்கலாம்.
தமிழகத்தின் தலைமையோ மௌனமாய்...


உயிரை பொருட்படுத்தாமல் பல பேரை காப்பாற்றிய 

காவல்துறை,இளம் தலைமுறைகள் ,பொதுமக்கள்
அனைவரின் பாதத்திற்கு என் பணிவான வணக்கம்.


பெங்களூரில், ஆந்திராவிலும் உண்டியல் ஏந்தி மாணவர்களும், தன்னார்வு தொண்டு நிறுவனமும், தமிழகத்திற்காக தெரு தெருவாய் (பிச்சை) நிதி வசூலிப்பதும்,
அனைத்து மாநிலங்களும் உதவிகரம் நீட்ட முன் வருவதை பார்க்கும் போது மனிதநேயம் இன்னும் மரிக்கவில்லை.

உதவும் அனைத்து உள்ளங்களுக்கும் தமிழனாகிய நான் கண்ணீருடன் பாதங்களுக்கு என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.  
பின்குறிப்பு: தெரு நாய்களை பிடித்து நாட்டின் பாதுகாப்பிற்காக அதன் பிறப்புறுப்பை அறுத்து எறிந்தாயே.,
கஜானாவை நிரப்ப மதுபானக்கடைகள் கல்லா.
ஏரி, குளம் கண்ணுக்கு தெரியாமல் போனதெப்படி? 

சுனாமியால் ஜப்பான் பாதிக்கப்பட்ட போது ஒரு கடைகாரர் விலை மாற்றமில்லாமல் பழைய விலையிலேயே விற்பனை செய்தார்.இன்று சூழ்நிலையை பயன்படுத்தி அநியாய விலையில் கொள்ளையடிக்கும் மிருகங்கள் சென்னையில் பார்க்கும் போது ...