Thursday 21 January 2016

கலைவாணி


அன்பின் திருவுருவம் நீ.
அறிவின் அகல்விளக்கு நீ.
உன் அருள் கிடைக்க எத்தனை பிறவிகள் தவம் செய்தேனோ..?
மாசில்லா நவரத்தினங்கள் நீ.
பணம் படைத்த அதிகார வர்கத்தினர் , 
பணிந்து முகஸ்துதி  பாடி 
உன் அருள் பெற்றவன் பாமரனாயினும் ,
அவன் காலில் விழ வைக்கும் 
உன் மகிமையே மகிமை.
தாயே, உன் அருள் பெற்றவன் 
சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நடக்க ,
பிழைக்க சிறிதளவாவது பண வசதி 
வேண்டாமா ?.
மனமிறங்கு தாயே.
பேயாயினும் தாய் தாயே.
ஆனால் நீயோ தாயிக்கெல்லாம் தாய்.
உன் மகன் துன்பத்தின்  , துயரத்தை அன்போடு அடியோடு துடைத்து கொடம்மா.
மரகத வீணையை மீட்டம்மா.
மனமிறங்கு தாயே கலைவாணி.

Friday 15 January 2016

ஜல்லிக்கட்டு


எதற்கெடுத்தாலும் நீதிமன்ற உத்தரவு.
நியாயமாய் தீர்க்க வேண்டிய வழக்குகள் எத்தனையோ இருக்க,
எத்தனை மாநிலங்கள் இந்தியாவில்..
பல்வேறு மொழிகள்,
பல்வேறு கலாச்சாரங்கள்,
பல்வேறு உணவுகள்,
என் தேசம், என் நாடு என்றால் அனைவரின் உணர்வும் ஒன்றே..
தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை யாராலும் அழிக்க முடியாது.
அனைத்திற்கும் கடவுள் என ஒருவர் இருக்கிறார்.
நேரம், காலம் வரும்போது அவர் யாரெனத் தெரியும்.
அந்நிய தீய சக்தியின் ஊடுருவளை 
இந்தியாவில் வசிக்கும் ஒரு கொசு கூட அனுமதிக்காது.
போகும் போக்கை பார்த்தால் மீண்டும் அரசாட்சி அமையலாம்.
நீதிமன்றம் அரசவைகளாகவும் , முதலமைச்சர்கள் குறுநில மன்னர்களாகவும் 
மாறும் நிலை வந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.