Wednesday 12 October 2016

நாட்டு நாய்


நன்றி என்ற சொல்லுக்கு தகுதியான மனிதனின் நண்பன்.
தமிழ் மொழி நன்கு புரிந்துகொள்ளும் நாலு கால் ஜீவன்.
சந்தர்ப்பம் கிடைத்தால் தன் உயிரையே கொடுக்கத் துணிந்த
விசுவாசத்தின் அடையாளம்.
அந்நிய நாட்டு கவர்ச்சி ஈர்ப்பால் மற்ற வெளிநாட்டு நாய்களை வளர்க்கும்
வறட்டு ஜம்ப மனித பதர்கள் .
நாங்கள் அதிகம் பெருகிவிட்டோம் என எங்களை எங்கள் இனத்தை வளர விடாமல் எங்களுக்கு கருத்தடை செய்து 
எங்கள் இனம் பெறுக விடாமல் அழிக்கும் அந்நிய சக்தியின் சதிவலை.
இந்நிலை நீடித்தால் எங்கள் இனம் முற்றிலும் அழிந்து போகும்.
 எங்கள் அருமை உணர்ந்த, அவர்கள் குடும்பத்தில் ஒருத்தராய் எங்கள் இனத்தை பாதுகாப்பது கிராமத்து மக்களே.
இறுதியாக ஒன்று...
உங்கள் பகுதியில் திரியும் எங்களுக்கு உணவிடுங்கள்.
எங்கள் இனத்தில் ஆணோ,பெண்ணோ, காது வெட்டு படாமல் இருந்தால் , (காது வெட்டுப்பட்டு இருந்தால் அதற்கு கருத்தடை செய்ததாக அர்த்தம்.)
தயவு செய்து அதன் கழுத்துக்கு ஒரு பட்டை(Belt) அணிவியுங்கள்.
கழுத்துப்பட்டை அணிந்த நாய்களை கருத்தடை செய்ய அதிகாரம் கிடையாது.

No comments :