Friday 4 May 2018

கீழான மக்கள்


கீழான மக்கள் என்பது ஜாதியை வைத்து பார்க்கவே கூடாது.
அது முற்றிலும் முட்டாள்தனம் மற்றும் அறியாமையே.
மற்றவர் பசியில் இருப்பதை அறிந்து வேலைவாங்குவது,
அல்லது அவருக்கு உணவு படைக்கும் கடமையிருந்தும்,
அதில் கண்டும் காணாமல் இருப்பது போன்ற குணம் உள்ளவர்களே
கீழான மக்கள்.


செல்வச்செழிப்போடு நுனிநாக்கில் பல மொழிகள் பேசினால் அவன் உயர்ந்தவன் என பொருள் கொள்ளக் கூடாது.


சாதாரண உடையில் தாய் மொழி மட்டுமே தெரிந்தவனாயிருந்தாலும்
பிறர் பசியெறிந்து உதவி செய்பவனே உயர்ந்தவன்.


கொடுப்பவனின் கரம் மேலே இருக்கும்.
வாங்குபவனின் கரம் கீழே இருக்கும் என்பார்கள்.

ஆனால் பிறர் பசிக்கு கொடுக்கும் போது  

நீ புண்ணியத்தை பெருகிறாய்.

No comments :