Friday, 23 March 2018

குழந்தை


குழந்தை வளர்ப்பு..?
அழாதே உன்னை பள்ளிக்கூடத்தில்
கொண்டு போய் விட்டுவிடுவேன் என மிரட்டுவது
குழந்தைக்கு பள்ளிக்கூடத்தின் மீது பயத்தை உருவாக்கும்.
குழந்தைக்கு தேவை அன்பும், அரவணைப்பும்  மட்டுமே...
அன்பினால் குழந்தையிடம் நாம் நினைத்ததை
நடத்தி முடிக்கலாம்.
குழந்தையும் தெய்வமும் ஒன்று என
அன்றே சூசகமாக நம் மூதாதையர் கூறி சென்றனர்.

Monday, 19 March 2018

தொழில்


 


தொழில் செய்ய தொழில்நுட்பம் 
அவசியம் தெரிந்து இருக்க வேண்டும்.
நாம் தொழில் செய்ய முடிவு செய்து இறங்கிவிட்டால்,
அதில் குடும்பம், நட்பு எதையும்
அதற்கு இடைஞ்சலாக வர
அனுமதிக்கூடாது.
தொழில் என்பது ஆண்மை. ஆளுமை.
அறியாதவன் நடைபிணத்திற்கு சமம்.
சமுதாயத்தில் முகம் தொலைந்து போவான்.
நிலைமையை ஏற்படுத்திக்கொண்டாலோ.
நிலைமையில் சிக்கிக்கொண்டாலோ
நீ காலத்தின் பிடியில் கைதியே...