Friday, 22 July 2016
Saturday, 18 June 2016
காதலும் கத்தரிக்காயும்
காதலும் கத்தரிக்காயும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.
சிலது சொத்தையாக இருக்கும்.
சிலது புழுவோடு இருக்கும்.
சிலருக்கு புண் இருந்தால் கத்தரிக்காய் தவிர்க்க வேண்டும்.
சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது.
முருங்கையோடு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
இதை நெருப்பில் சுட்டு பச்சடி செய்வார்கள்.
பெற்றோர் திட்டும் போது காதலாவது கத்தரிக்கையாவது எனவும் திட்டுவர் .
காதல்-கத்தரிக்காய்
முருங்கை-தாம்பத்தியம்
சாதம்-வாழ்க்கை
Sunday, 1 May 2016
Wednesday, 20 April 2016
மரம்
உன் பாட்டன் நான் வாழும் இடம் அருகில் இடம் வாங்கினான்.
உன் அப்பன் அந்த இடத்தில் வீடு கட்டினான்..
நீ வசிக்கும் வீட்டில் என் வேர் ஊடுருவும்
என
என்னை வெட்ட சொல்லி விட்டாயே,
நன்றிகெட்ட மனிதனே ,
நான் வாழ்ந்த இடத்தில், நீ வசிக்க என்னையே அழிக்க துணிந்தவன் நீ.
உன் மூதாதையர்களையும்,எத்தனையோ பறவைகளையும் ,
இந்த பூமியையும் காத்த என்னை அழித்தால் உன் தலைமுறைகள் எப்படி தழைக்கும்?.
நான் இறந்தாலும் விறகாக பயன்படுவேன்.
நீ இறந்தாலும் உன்னை எரிக்கவோ, புதைக்கவோ நான் பயன்படுவேன்.
இறுதியாக உனக்கு ஒன்று சொல்லுகிறேன்.
என் தயவால்தான் நீ...
உன் தயவால் நான் அல்ல...
நீ எந்த மதத்தவனாக இருந்தாலும் எனக்கு அது முக்கியமல்ல...
முதலில் நீ நன்றி மறவாத மனிதனாக இரு.
Wednesday, 13 April 2016
வாக்காளர்கள்
தேர்தல் சமயம் எத்தனையோ கட்சிகள்,
எத்தனையோ வாக்குறுதிகள்,
எனக்கு எந்த கட்சியும் பிடிக்கவில்லை,
நான் வோட்டு போட போவதில்லை
என
கூறுவது மிகவும் தவறு.
உன்னை போன்றோருக்காக வோட்டு மெசினில் கடைசியாக
NOTA (None Of The Above)
பொத்தான் உள்ளது.
அதையாவது அழுத்தித்தொலை.
அப்போதுதான் இந்திய தேசிய கொடியை உன் நெஞ்சில் சுமக்கும் அருகதை உனக்கு உண்டு.
Monday, 21 March 2016
தொப்புள்கொடியும் - தேசியக்கொடியும்
தொப்புள்கொடி அறுத்தவுடன், தேசியக்கொடி நம்மோடு பிணைகிறது.
முதலாவது நமக்கு உயிர் கொடுத்தது. இரண்டாவது நம்மை வாழ வைப்பது.
அப்படிப்பட்ட தேசியக்கொடியை இருகரம் கூப்பி வணங்குவோம்.
நம்மை அடிமைபடுத்தி ஆட்சி செய்த வெள்ளையன் பண்பு சல்யூட். அடிமையாய் இருந்தபோது அவனிடம் கற்ற அவன் செய்கையை அப்படியே பின்பற்றுவது என்ன (இன்றுவரை) மடமை.
சல்யூட் நம் தேச கலாச்சாரம் அல்ல.நம் பண்பு அல்ல.
இனிமேலாவது நம் தேசியக்கொடியை இருகரம் கூப்பி வணங்குவோம்.
சல்யூட் பற்றி முழுமையாய் அறிந்து கொள்ள கூகிள்லில் தேடி பாருங்கள் உண்மை புரியும்.
Thursday, 25 February 2016
Thursday, 18 February 2016
ஜெய்க்க வேண்டும்
சிரிக்கும் வரை சிரித்து விட்டேன்.
அழும் வரை அழுது விட்டேன்.
வாழ்ந்தவரை வாழவில்லை.
போகும் தூரம் தொலைவில் இல்லை,
புரிந்தது புரியாமல் போனது.
தெரிந்தே...
ஜெய்க்க வேண்டுமென வெறியெதர்க்கு..?
அழும் வரை அழுது விட்டேன்.
வாழ்ந்தவரை வாழவில்லை.
போகும் தூரம் தொலைவில் இல்லை,
புரிந்தது புரியாமல் போனது.
தெரிந்தே...
ஜெய்க்க வேண்டுமென வெறியெதர்க்கு..?
Thursday, 21 January 2016
கலைவாணி
அன்பின் திருவுருவம் நீ.
அறிவின் அகல்விளக்கு நீ.
உன் அருள் கிடைக்க எத்தனை பிறவிகள் தவம் செய்தேனோ..?
மாசில்லா நவரத்தினங்கள் நீ.
பணம் படைத்த அதிகார வர்கத்தினர் ,
பணிந்து முகஸ்துதி பாடி
உன் அருள் பெற்றவன் பாமரனாயினும் ,
அவன் காலில் விழ வைக்கும்
உன் மகிமையே மகிமை.
தாயே, உன் அருள் பெற்றவன்
சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நடக்க ,
பிழைக்க சிறிதளவாவது பண வசதி
வேண்டாமா ?.
மனமிறங்கு தாயே.
பேயாயினும் தாய் தாயே.
ஆனால் நீயோ தாயிக்கெல்லாம் தாய்.
உன் மகன் துன்பத்தின் , துயரத்தை அன்போடு அடியோடு துடைத்து கொடம்மா.
மரகத வீணையை மீட்டம்மா.
மனமிறங்கு தாயே கலைவாணி.
Friday, 15 January 2016
ஜல்லிக்கட்டு
எதற்கெடுத்தாலும் நீதிமன்ற உத்தரவு.
நியாயமாய் தீர்க்க வேண்டிய வழக்குகள் எத்தனையோ இருக்க,
எத்தனை மாநிலங்கள் இந்தியாவில்..
பல்வேறு மொழிகள்,
பல்வேறு கலாச்சாரங்கள்,
பல்வேறு உணவுகள்,
என் தேசம், என் நாடு என்றால் அனைவரின் உணர்வும் ஒன்றே..
தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை யாராலும் அழிக்க முடியாது.
அனைத்திற்கும் கடவுள் என ஒருவர் இருக்கிறார்.
நேரம், காலம் வரும்போது அவர் யாரெனத் தெரியும்.
அந்நிய தீய சக்தியின் ஊடுருவளை
இந்தியாவில் வசிக்கும் ஒரு கொசு கூட அனுமதிக்காது.
போகும் போக்கை பார்த்தால் மீண்டும் அரசாட்சி அமையலாம்.
நீதிமன்றம் அரசவைகளாகவும் , முதலமைச்சர்கள் குறுநில மன்னர்களாகவும்
மாறும் நிலை வந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.
Thursday, 3 December 2015
சென்னை மழை வெள்ளம்
அதிகார பலத்தாலும்,அரசியல் அதிகாரத்தாலும்
ஏரிகளை மறந்தோம்,மறுத்தோம்,மறைத்தோம்.
குலம் காக்கும் குளங்களை மறந்தோம்,மறுத்தோம்,மறைத்தோம்.
இயற்கைக்கு தெரியுமா ?அதிகாரமும் அரசியலும்.
முன்பே முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமல்லவா?
விளைவு பாம்புகளும், எலிகளும், மீன்களும் குடியிருப்பு பகுதிகளில்.
ராணுவம் தரும் உணவுக்கு என் தமிழக மக்கள் கையேந்தி நின்ற போது என் தமிழக மக்களின் நிலையை கண்டு நெஞ்சமே நொறுங்கியது.
சிங்கார சென்னை கேள்விக் குறியானதர்க்கு யார் பொறுப்பு?
தயவுசெய்து இயற்கையை குறை கூறாதீர்கள்.
அது தன் கடமையை செய்தது.
மீண்டு விட்டாலும் , இயல்பு நிலை அடைய ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும்.
வாய் கிழிய அரசியல் பேசும் அரசியல்வாதிகள் ஒருவரையும் காணவில்லை.
இதை காரணம் காட்டி வாக்குகளை வாரி குவித்திருக்கலாம்.
நல்ல வாய்ப்பை இழந்து விட்டார்கள்.
வெளி மாநிலத்தில் இருந்து தன் கட்சிக்காக உயிரையே (!?!) கொடுக்கும் தொண்டர் படையை கொண்டு வந்து மக்களை மீட்டு இருக்கலாம்.
தமிழகத்தின் தலைமையோ
உயிரை பொருட்படுத்தாமல் பல பேரை காப்பாற்றிய
காவல்துறை,இளம் தலைமுறைகள் ,பொதுமக்கள்
அனைவரின் பாதத்திற்கு என் பணிவான வணக்கம்.
பெங்களூரில், ஆந்திராவிலும் உண்டியல் ஏந்தி மாணவர்களும், தன்னார்வு தொண்டு நிறுவனமும், தமிழகத்திற்காக தெரு தெருவாய் (பிச்சை) நிதி வசூலிப்பதும்,
அனைத்து மாநிலங்களும் உதவிகரம் நீட்ட முன் வருவதை பார்க்கும் போது மனிதநேயம் இன்னும் மரிக்கவில்லை.
உதவும் அனைத்து உள்ளங்களுக்கும் தமிழனாகிய நான் கண்ணீருடன் பாதங்களுக்கு என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
பின்குறிப்பு: தெரு நாய்களை பிடித்து நாட்டின் பாதுகாப்பிற்காக அதன் பிறப்புறுப்பை அறுத்து எறிந்தாயே.,
ஏரி, குளம் கண்ணுக்கு தெரியாமல் போனதெப்படி?
சுனாமியால் ஜப்பான் பாதிக்கப்பட்ட போது ஒரு கடைகாரர் விலை மாற்றமில்லாமல் பழைய விலையிலேயே விற்பனை செய்தார்.இன்று சூழ்நிலையை பயன்படுத்தி அநியாய விலையில் கொள்ளையடிக்கும் மிருகங்கள் சென்னையில் பார்க்கும் போது ...
Wednesday, 25 November 2015
வாள்
வாள் மிகவும் சக்தி வாய்ந்தது.
நன்கு கையாளத்தெரிந்த வீரன் கையில் இருந்தால்
வீரன் பலமடங்கு சக்தி பெறுகிறான்.
எதிரிகளை வெட்டி வீழ்த்தவும் , தன்னை தற்காத்துக்கொள்ளவும்
வாள் மிகவும் உன்னதமானது.
பெண்ணும் வாளும் ஒன்று.
இல்லறம் நல்லறமாக அமைய பெண்ணின் பங்கு மிகவும் உன்னதமானது.
மற்றவர் கூறும் மதிமயக்கும் சொல்லால் பெண் மடமையானால்,
குடும்பத்தின் நிம்மதியை கொல்வாள்.
கணவனின் நிம்மதியை கொல்வாள்.
அதன் பலனாக தன் நிம்மதியை தானே மாய்த்துக் கொல்வாள்.
தன் ஊதாரிதனத்தால் குடும்பத்தின் நிம்மதியை கொல்வாள்.
அவளை நன்கு கையாளத் தெரியாத கணவன் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிறான்.
தன் குடும்பத்தையும் பாதுகாக்க முடியாமல்,
தானும் நிம்மதி இழந்து தவிக்கிறான்.
எமனை பாசத்தோடு எதிர்நோக்க காத்திருக்கிறான்.
எமனோ கையாலாகாத அவனை வெறுப்போடு பார்கிறான்.
பெண்ணும் வாளும் ஒன்று.
நன்கு கையாளத்தெரிந்த வீரன் கையில் இருந்தால்
வீரன் பலமடங்கு சக்தி பெறுகிறான்.
எதிரிகளை வெட்டி வீழ்த்தவும் , தன்னை தற்காத்துக்கொள்ளவும்
வாள் மிகவும் உன்னதமானது.
பெண்ணும் வாளும் ஒன்று.
இல்லறம் நல்லறமாக அமைய பெண்ணின் பங்கு மிகவும் உன்னதமானது.
மற்றவர் கூறும் மதிமயக்கும் சொல்லால் பெண் மடமையானால்,
குடும்பத்தின் நிம்மதியை கொல்வாள்.
கணவனின் நிம்மதியை கொல்வாள்.
அதன் பலனாக தன் நிம்மதியை தானே மாய்த்துக் கொல்வாள்.
தன் ஊதாரிதனத்தால் குடும்பத்தின் நிம்மதியை கொல்வாள்.
அவளை நன்கு கையாளத் தெரியாத கணவன் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிறான்.
தன் குடும்பத்தையும் பாதுகாக்க முடியாமல்,
தானும் நிம்மதி இழந்து தவிக்கிறான்.
எமனை பாசத்தோடு எதிர்நோக்க காத்திருக்கிறான்.
எமனோ கையாலாகாத அவனை வெறுப்போடு பார்கிறான்.
பெண்ணும் வாளும் ஒன்று.
Tuesday, 20 October 2015
என் மரணம் எனக்கு புதிதல்ல
சிறு வயது முதல் எத்தனையோ அவமானங்கள்,ஏமாற்றங்கள், துன்பங்கள்.
பலநூறு முறை இறந்து விட்டேன்.
எத்தனையோ திறமைகளை ஆண்டவன் எனக்கு வழங்கி இருந்தாலும்
அதையெல்லாம் மற்றவர்கள் பயன் படுத்தி என்னை ஏமாற்றி நடுத்தெருவில் நிறுத்திய போதும்,
பலநூறு முறை இறந்து விட்டேன்.
பலமுறை ஆண்டவன் என்னிடம் வந்துவிடு என பலஅறிகுறிகள் காட்டியபோது அதையெல்லாம் நிராகரித்தேன்.
என்மீது அன்பு செலுத்துவாயா? எனக்கு அன்பு ஒன்றே போதும் என
பலநூறு முறை உறுதிபட கேட்டு என்னையே அற்பணித்த பிறகு...,
நடைமுறையில் அவையெல்லாம் கானல் நீராகி போனபோதும் (போதுமடா சாமி)
பலநூறு முறை இறந்து விட்டேன்.
என் மரணம் எனக்கு புதிதல்ல...
பலநூறு முறை இறந்து விட்டேன்.
எத்தனையோ திறமைகளை ஆண்டவன் எனக்கு வழங்கி இருந்தாலும்
அதையெல்லாம் மற்றவர்கள் பயன் படுத்தி என்னை ஏமாற்றி நடுத்தெருவில் நிறுத்திய போதும்,
பலநூறு முறை இறந்து விட்டேன்.
பலமுறை ஆண்டவன் என்னிடம் வந்துவிடு என பலஅறிகுறிகள் காட்டியபோது அதையெல்லாம் நிராகரித்தேன்.
என்மீது அன்பு செலுத்துவாயா? எனக்கு அன்பு ஒன்றே போதும் என
பலநூறு முறை உறுதிபட கேட்டு என்னையே அற்பணித்த பிறகு...,
நடைமுறையில் அவையெல்லாம் கானல் நீராகி போனபோதும் (போதுமடா சாமி)
பலநூறு முறை இறந்து விட்டேன்.
என் மரணம் எனக்கு புதிதல்ல...
Tuesday, 15 September 2015
Saturday, 5 September 2015
Saturday, 22 August 2015
விரல் நுனி
தகவல்கள் கேட்டறிதல்...
மேம்பட்ட தொழில் வளர்ச்சி...மேம்பட்ட தொழில் வளர்ச்சி...
விரல் நுனி மூலம் ஒரு உயிரையே பறிக்கலாம்...
விரல் நுனி மூலம் ஒரு யானையையே ...
விரல் நுனி மூலம் தகவல் தொடர்பு...
எளிய முறையில் விரல் நுனி மூலம் தகவல் தொடர்பு...
உலகமே விரல் நுனியில் வந்தாச்சு...
விரல் நுனியில் ஒரு நாட்டையே...
ஆனால் இவையனைத்தையும் தாண்டி சக்திமிக்கவை
நம் விரல் நுனிக்கு மேல் சக்தி வாய்ந்தவை நாம் எழுதும் பேனாவின் கூரிய முனை.
எல்லாவற்றிற்கும் மேல் சக்தி மிகுந்தவை நாம் எழுதும் எழுத்துக்கள்.
Saturday, 15 August 2015
வெற்றி முறை
உன்னை ஒருவன் அழிக்க வேண்டுமானால் ,
அவன் பணத்தால் அது முடியாது.
போட்டி தொழில் முறையும் அவனுக்கு பயன்படாது.
வேறு எந்த முறையும் முழுமையாக
செயல்படாது.
ஒரே ஒரு வழிதான் உள்ளது.
உனக்கு விடாமல் மன உளைச்சலை (செலவே இல்லாமல்)
அவன் தந்து கொண்டே இருந்தால் போதும்.
வெம்பி வெதும்பி
நீயாகவே உன் பெயர், புகழ் ,தொழில்,உன் சிந்தனை,
உன் உறவுகள், உணர்வுகள் அனைத்தையும் அழித்துக் கொள்வாய்.
சுருக்கமாக கூறின் நீ ஜடமாவாய்.
எதிரி வெற்றி பெறுவான்.
இதில் தப்பிக்க ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது.
தொடர்ந்து நமக்கு தரும் அல்லது வரும்
மன உளைச்சலை உதறி தள்ளி விட்டு
தொடர்ந்து பயணிக்க வேண்டும். எதிரி தானாய் வீழ்வான்.
உதறி தள்ள தெரியவில்லையா ?.
ஒரு மந்திரம் :
நாமாக விரும்பி ஏற்றுக்கொண்டதை
நாமாகவே வெறுத்து ஒதுக்க முடியும்.
என்பதை உணர்ந்தாலே போதும்.
வெற்றி நிச்சயம்.
Saturday, 1 August 2015
Sunday, 26 April 2015
குடும்பம்
தன் கணவனையோ,மனைவியையோ,
அல்லது
தன் குடும்பத்தினரையோ
நண்பர்களோ, உறவினர்களோ கிண்டலாக பேசவோ
அல்லது
நம் குடும்ப மற்றும் தொழில் விஷயங்களை பேச அனுமதிக்க கூடாது.
அவர்கள் பேசும்போது
நாம் ஆமாம் சாமி போட்டால்
குடும்பத்தில் விரிசல் உருவாகும்.
அந்த நொடி நேரத்தில் அவர்கள்
நம் குடும்பத்தை அவர்கள் நடத்தி சென்று விடுவார்கள்.
அல்லது
தன் குடும்பத்தினரையோ
நண்பர்களோ, உறவினர்களோ கிண்டலாக பேசவோ
அல்லது
நம் குடும்ப மற்றும் தொழில் விஷயங்களை பேச அனுமதிக்க கூடாது.
அவர்கள் பேசும்போது
நாம் ஆமாம் சாமி போட்டால்
குடும்பத்தில் விரிசல் உருவாகும்.
அந்த நொடி நேரத்தில் அவர்கள்
நம் குடும்பத்தை அவர்கள் நடத்தி சென்று விடுவார்கள்.





























