Tuesday 28 May 2013

பணம்

எண்ணும்போதே சேமிக்கநினை

பணம் சம்பாதிக்க பல நூறு வழிகள்.
அதில் நேர்மையானவைகள் சில பத்து வழிகள்.
அதிலும் எதிர்பாராமல் நாம் நினைத்ததைவிட
அதிகமாகவே வரவு.
எப்படியாயினும் வந்த பணத்தை இருக்கி பிடித்து
சேமிக்காமல் போனால்....
காலம் நம்மை கந்தலாக்கும்.
பணம் நம்மைப் பார்த்து பல்லிளிக்கும்.

காலச்சக்கரம்

நம்மைச் சுற்றி நாம் விரும்பாத
நிகழ்வுகள்.
மௌனத்தை அதிகப்படுத்தி,
அதை மேலும் புனிதமாக்க
இறையருளை நாடி கோவிலுக்குள்
தஞ்சம்.
காலச் சக்கரத்தின் வேகத்தோடு ஈடு
கொடுத்துச் செல்ல நல்ல வழி.

Saturday 25 May 2013

வீரத்திருமகள்



மதிப்புமிக்க சகோதரிக்கு,
எத்தனையோ புத்தகங்கள்,
எத்தனையோ தத்துவங்கள்,கவிதைகள்
எத்தனையோ கருத்துக்கள்.
இன்று மக்கள் பொழுதுபோக்கு அம்சம்
நிறையவே உள்ளதால்,
மக்களும் வேகமாக...

புத்தகம் படிக்க சோம்பேறித்தனம் ஒரு சிலருக்கு.

எதற்கும் உதவாத உறவுகள் ஒரு சிலருக்கு.

ஆதாயத்தையே எதிர்பார்த்து பழகும் நண்பர்கள் ஒரு சிலருக்கு.

இதனிடையே முகம் தெரியாத உள்ளம் பகிரும் உணர்வுகள்
அதுவும் கவிதையாய் எத்தனையோ உள்ளங்களை கொள்ளை கொண்டு
உரிமையோடு கருத்திடும் நல்ல நெஞ்சங்கள்  வலைதளத்தின் வாயிலாக,

அனைவரும் ஏக்கம் அடைவார்கள் நல்ல கவிதைகளை (சு)வாசிக்க முடியாமல்.

எண்ணம் ஒரு நிலையில் இருந்தால் மட்டுமே உணர்வான கவிதைகள் தோன்றும்.

தங்களின் கவிதை படைப்புகள் காலத்தை வெல்லக்கூடியவை.
தங்கள் பலம் தங்களுக்கு புரியாமல் போனது துரதிஷ்டவசமானது.

விதவைத்தாயை  வெளியே எங்கு அழைத்தாலும் தட்டிக்கழித்ததும்,
கோவிலில் தாயை குருக்கள் புறக்கணிப்பதை புரியாமல் போனதும்,
மாந்தர்தனை சமுதாயம் எப்படியெல்லாம் பாடுபடுத்துகிறது என்பதை
புரிந்தபோது


வீறுகொண்டு சீறி எழுந்து தைரியமாக உணர்வுகளை
கவிதையாய் அக்கினி எழுத்துக்களை விதைக்கும் ஒரு ஜான்சி ராணியாய்
தங்களின் படைப்புகளை காண முடிந்தது.மனதில் மட்டற்ற மகிழ்ச்சி.
என்னைபற்றி என்னத்தைச்சொல்ல என்பதில் ஆரம்பித்து எத்தனையோ எத்தனையோ சொல்லியாச்சு.இன்னமும் சொல்ல வேண்டியது எத்தனையோ..?
விடைபெற வேண்டாமே...முடமாகிய உள்ளத்திற்கு ஊன்றுகோல்
கொடுத்து மீண்டும் நிமர்ந்து எழவைக்கும் தன்மை எத்தனை பேருக்கு
முடியும்.
இறைவன் கொடுத்த வரத்தை நாம் தடுக்கலாமா? தயை கூர்ந்து
தாங்கள் மீண்டும் எழுத வேண்டும் சகோதரி.எந்த வகையான துன்பத்தையும்
எதிர்கொள்ளும் அனைத்து திறமைகளும் கொண்டவர் தாங்கள். தற்பெருமை,முகஸ்துதிக்கு மலுங்காதவர்.
உணர்வான எழுத்துக்களை நுகர்ந்து உள்வாங்கும் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த உண்மை தெரியும்.
நிறைவாக..
பேரும் வேண்டாம்.
புகழும் வேண்டாம்.
ஜாதியும் வேண்டாம்.
மதமும் வேண்டாம்.
உணர்வுகளை படைப்போம்.
அதன்மூலம் மனதை மேம்படுத்துவோம்.
மேம்பட்ட மனம் மூலம் சமுதாயத்தை முடிந்தவரை
மாற்றியமைப்போம்.
முடியாமல் போனால் ஆறுதல் படுத்துவோம்.
துடிப்புமிக்க வீரமான புரவியும், புதியதாய் தணலில் இருந்து சம்மட்டியில்
அடி வாங்கி மிக கூர்கொண்ட வீரவாளும் காத்திருக்க புறப்படு சகோதரி.
குறைவான நேரமே... நிறைய எழுத வேண்டும்.
சரித்திரத்தை திக்குதோறும் கொண்டாட...


 

Tuesday 21 May 2013

உபத்திரவம்

உபகாரம் செய்பவர்களுக்கு
தொடர்ந்து உபத்திரவம்
கொடுத்தால்
என்றாவது ஒரு நாள் கடும்
விரயத்தை சந்திக்க நேரும்.