Saturday 22 July 2017

இணையம் குடி பேரழிவை நோக்கி இந்தியா


இணையதளத்தில் மிகுந்த பயனுள்ள வசதிகள் இருப்பது நிதர்சனமான உண்மை.
மேலும் ஒருசில வெளி நாடுகளில் ஆபாச இணையதளங்கள் வராதவாறு முடக்கியுள்ளனர்.
அது நாட்டிற்கு ஆரோகியமான விஷயம்.
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவரானதும், தமிழ் திரைப்படங்கள் திருட்டுத்தனமாக ஒளிபரப்பி வந்த இணையதளங்கள் சிலவற்றை இந்தியாவில் முடக்கப்பட்டன.
இதுவே  சாத்தியமான போது இந்தியாவில் ஆபாச இணைய தளங்களை முடக்க முடியாதா?

தமிழகம் தற்போது குடித்துவிட்டு நிதானமில்லாமல் இருப்பதால், மத்தியபிரதேசம், டெல்லி நிருபையா போன்ற பாலியல் வன்கொடுமை மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவே.
பணம் படைத்த அம்பானி குழுமம் இணையதளம் வசதிகொண்ட கைபேசி இலவசமாக வழங்கினால் அனைத்து ஆபாச இணையதளங்கள் சுதந்திரமாக சுற்றும் இந்தியாவில்,  பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடும். பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.
 வெளிஉலகம் அறியாத குடும்ப பெண்கள் கட்டுபாடுகளை இழப்பர்.
கலாசாரம், பண்பாடு  சீரழியும். 
பெண்களை பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பெண் குழந்தைகளை கண்காணித்து பாதுகாக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு.
13 வயது நிரம்பிய சிறுவன் (!) கற்பழித்தால் கண்டிப்பாக அந்த பெண் கருத்தரிக்க வாய்ப்புண்டு . ஆனால் அந்த கேடுகெட்டவனுக்கு  கடும் தண்டனை குடுக்க நம் சட்டத்தில் இடமில்லை.ஏனெனில் அவன் மைனராம்.
பதினேட்டு வயது ஆகாதவனாம்.அவன் சிறுவனாம்.(!)

மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய காவல்துறையே ....
கார்பரேட் கம்பனி துணையை மட்டுமே நம்பி  பதவியை தக்கவைத்துக் கொள்ள மட்டுமே ஆட்சி நடத்தினால் சாதாரண மக்களின் வாழ்க்கை ?
இந்தியாவின் நிலை ? விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது. 

தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள்.

இனி வரும் தேர்தலில் ஜாதிக்காரன், கட்சி சின்னம், பாராமல் 
பொங்கல் விடுமுறையை தடைசெய்து மீண்டும் வாபஸ் பெற்றது, 
எண்ணற்ற விவசாயிகள் தற்கொலையை கண்டுகொள்ளாமல் போனது, தமிழகத்தை சுடுகாடாக மாற்ற நெடுவாசல் திட்டம்,
ஜல்லிக்கட்டு அறப்போராட்டம் நடத்திய மக்களை...,
நாட்டு மாட்டினங்களை பூண்டோடு அழிக்க முயற்சித்தது,
அனைத்தையும் மனதில் வைத்து வேட்பாளர்களை தகுதியறிந்து தேர்வு செய்யுங்கள். இனியாவது விடியலை நோக்கி பயணிப்போம்.

 

Monday 10 July 2017

காலனும் நானும்



சில நேரங்களில் இருக்கிறாரா, இல்லையா என்று சந்தேகம் தோன்றுகிறது.
எனை போல் நீங்களும் மௌனியா....
அனுபவிப்பவனுக்குத்தான் தெரியும் வலியின் கொடுமை.
வாழவேண்டும் என எத்தனையோ மானிட பதர்கள் 
துடியாய் துடிக்க 
திடீரென மாண்டுபோகின்றனர்.
உங்களிடம் வந்து சேர வேண்டும்
என துடிக்கும் எத்தனையோ பேர் 
இன்னமும் துடிதுடித்து வாழ்கின்றனர். 
எனைப்போல...

Thursday 6 July 2017

சுமைதாங்கி



அன்னப்பறவை பாலையும், தண்ணீரையும் 
தனியே பிரித்து பாலைமட்டும் பருகுமாம்.
அது போல்,

சில குடும்ப தலைவர்கள் குடும்பத்தின் மொத்த துன்பத்தையும் 
தான் ஏற்றுக்கொண்டு,
மீதி மகிழ்ச்சியை தன் குடும்பத்திற்கு தந்து விடுகிறார்கள்.