Thursday 10 April 2014

கண்ணீர்



மனதை துன்புறுத்தும் வேதனைகள்,
நன்கு தீர்வு தெரிந்தும் அதை தீர்க்கமுடியாத நிலை.
மிக கொடுமை.
வேதனைகளின் உச்சம் கண்ணீர்.
கண்கள் வழியாக வெளியேறி
மனதில் உள்ள துன்பத்தை சிறிது நேரம்
அடக்கி வைக்கிறதே!

சும்மா பேருக்காவது ஆறுதல் சொல்ல நாதியில்லாத
ஆத்மாவின் கண்ணீர்  வேதனையின்
உண்மையான ஆறுதல்.

Saturday 18 January 2014

பாத பூஜை தராதரம்



பாத பூஜை செய்து
அந்த தண்ணீரை குடிக்கும்
நிலை வர விடக்கூடாது.


முட்டாள்தனத்தால்
 
ஏமாந்து அந்த நிலை அடைந்தால்,
தகுதி தராதரம் உள்ள
பாதத்தை கண்டு பிடித்து
கழுவவேண்டும்.


தெரியாமல் அவசரத்தில் கண்ட
கேவலமான பாதத்தை கழுவிவிட்டால்
பின்பு நீண்ட காலம் கிருமியினால்
அவதியுற நேரும்.
(இந்த கேவலத்தை இதற்கு மேல் நாகரிகமாக
விளக்க முடியாது).