Tuesday 20 October 2015

என் மரணம் எனக்கு புதிதல்ல

சிறு வயது முதல் எத்தனையோ அவமானங்கள்,ஏமாற்றங்கள், துன்பங்கள்.
பலநூறு முறை  இறந்து விட்டேன்.
எத்தனையோ திறமைகளை ஆண்டவன் எனக்கு வழங்கி இருந்தாலும் 
அதையெல்லாம் மற்றவர்கள் பயன் படுத்தி என்னை ஏமாற்றி நடுத்தெருவில் நிறுத்திய போதும், 
பலநூறு முறை  இறந்து விட்டேன்.
பலமுறை ஆண்டவன் என்னிடம் வந்துவிடு என பலஅறிகுறிகள் காட்டியபோது அதையெல்லாம் நிராகரித்தேன்.
என்மீது அன்பு செலுத்துவாயா? எனக்கு அன்பு ஒன்றே போதும் என 
பலநூறு முறை உறுதிபட கேட்டு என்னையே அற்பணித்த பிறகு...,  
நடைமுறையில் அவையெல்லாம் கானல் நீராகி போனபோதும் (போதுமடா சாமி) 
பலநூறு முறை  இறந்து விட்டேன்.
என் மரணம் எனக்கு புதிதல்ல...