Thursday 8 August 2013

தாய்ப்பாசம்

                                           


தான் பெற்ற குட்டிகளுக்கு
நாய் காட்டும் பாசம் கூட இன்றைய மனித
குழந்தைகளுக்கு தாய்ப்பாசம் கிடைப்பதில்லை.


மிக கூர்ந்து ஆராய்ந்து பார்த்ததில் 

 
பணத்திற்கு ஆசைப்பட்டு சிசேரியன் செய்யும்
ஒரு சில மருத்துவர்களும்


அரைகுறையாக படித்து பட்டம் பெற்று
பயத்தில் சுகப் பிரசவத்தையும்

சிசேரியன் மூலம் வைத்தியம் செய்தவர்களும்,

நல்ல நேரத்தில் குழந்தை ஜனிக்க வேண்டும் என
இறைவன் குறித்த நேரத்திற்கு முன்பாகவே
சிசேரியன்  மூலம் குழந்தைப்பெறுவது


இவற்றால் உண்மையான தாய்ப்பாசம்
பட்டுப்போகிறது.


சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றவள்
அவள் உயிரை பணயம் வைத்து பெற்றதினால்
தன் குழந்தையிடம் உயிரையே வைக்கிறாள்.
குழந்தைக்காக பதறிப்போகிறாள்.


நோகாமல் குழந்தை பெற்றவள் குழந்தையிடம்
எரிந்து விழுந்து அதன் அருமை
புரியாமல் உணராமல்
அதன் பிராணனை வாங்குகிறாள்.


கண்டிப்பாக இருப்பதாக நினைத்து ஓவராக அதட்டி பந்தா விடுகிறாள்.
 

அப்பன் விதைக்கிறான்.
அம்மா தாய்ப்பாலோடு 
தேசப்பற்று ,பாரம்பரியம்,கலாச்சாரம் ,
போதிக்க கடமைப்பட்டவள்.
ஆனால் இன்று தவறாக குழந்தை வளர்க்க
காரணமாகிறாள்.