Tuesday 24 January 2017

ஆரோக்கியமான விஷயம்



மார்ச் 1 முதல் வெளிநாட்டு பானங்கள் விற்பதை தமிழக வணிகர்கள் தடை செய்ய அதன் தலைமை அறிவித்திருப்பது தமிழகத்துக்கு ஆரோக்யமான விஷயம்.
விழிப்பது ஒருமுறை விழித்துவிட்டால் என்றுமே வீழ்ச்சி கிடையாது. குறுக்கில் எந்த பெட்டியும் இதை உடைக்காமல் நடைமுறைக்கு வந்தால் தமிழர்களாகிய நாமும் முழு ஒத்துழைப்பு தந்தால் தமிழகம் இந்தியாவில் முதலிடம் நோக்கி அசுரவேகத்தில் பயணிக்கும்.

ஜனநாயகம்


அடிமைத்தனம்  என்னும் துன்பம் 
ஒரு கட்டத்தில் தாங்க முடியாத நிலை வரும்போதும், 
சகிப்புத்தன்மை எல்லையை தொடும்போதும் 
நியாயமான போராட்டமாக உருவெடுக்கிறது. 
இறுதியாக மக்களிடம் போராட்ட குணம் மேலோங்குகிறது. 
நாடெங்கும் எங்கும் கலவரம். 
பொது சொத்து (அது அவர்களின் சொத்து) சூறையாடப்படுகிறது.
வன்முறை வெடிக்கிறது. கலவரம் செய்தவர்கள் சில,பல பேர் கொல்லப்பட்டும் போராட்டம் ஓயவில்லை.
முடிவில் மக்கள் கேட்டது அவர்களுக்கு கிடைக்கிறது அல்லது கிடைக்காமல் போகிறது. 

பிரிவினை மக்களுக்குள் இந்த நிலையில் விஸ்வரூபம் எடுக்கிறது (இதில் அரசியல் பங்கு அதிகம் உள்ளது).
மேற்கூறிய இவையெல்லாம் பல நாடுகளில் இன்றுவரை நடந்துவரும் சம்பவங்கள் நாம் இதுவரை கண்டு வருவது. 
ஆனால் தமிழர்களின் அறப்போராட்டம் உலகிற்கே முதல் எடுத்துக்காட்டாய் அமைந்தது. உலக தமிழர்கள் அனைவரும் அறப்போராட்ட களத்தில், துபாயில் இருப்பவர் அங்கிருந்தே,
அதுபோல் அனைத்து உலக நாடுகளில் இருக்கும், தமிழர்கள் அறப்போராட்டத்தை நடத்தி அறப்போராட்டம் என்னும் சக்தியின்  (அணுகுண்டை விட) வலிமையை  உலகிற்கு காட்டி விட்டனர்.

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்னும் வாசகத்தை பார்க்க முடிந்தது.
என்னை பொறுத்தமட்டில் (ஒடுக்கப்பட்டவர்கள்) 

விழிப்பது ஒருமுறை விழித்துவிட்டால் என்றுமே வீழ்ச்சி கிடையாது
என்றே முழமையாக நம்புகிறேன்.இதையே ஜனங்களின் நாயகமாக (ஜனநாயகமாக) விழைகிறேன்.

Monday 23 January 2017

ஜல்லிக்கட்டு23


அசோக சக்கரத்தில்
 மாபெரும் மாணவ, இளைஞர்கள், தமிழ் உணர்வாளர்கள்
அனைவரும் ஒற்றுமையாய் அறப்போராட்டத்தில் இரவும், பகலும், 7 நாட்கள் அறப்போராட்டத்தில் போராடி ஜல்லிக்கட்டு சட்டத்தை,  தமிழர் உரிமையை மீட்டு தந்தனர்.
இதில் ஜாதி, மதம் , பாலினம்  பாகுபாடெல்லாம்
மறித்து போய்
தமிழர் உரிமை என்ற ஒன்றே தலை தூக்கி நின்றது.
ஆறாம் நாள் இரவு முதல் பல தரப்பட்ட கட்சிகளை சேர்ந்த
அரசியல்வாதிகள் மற்றும் தீயசக்திகள்  சூழ்ச்சிகள் அரங்கேற தொடங்கின.
பாவம் இளைய சமுதாயம்.
சூதிலே அந்த சகுனியையே தோற்கடிக்கும் நம் அரசியல்வாதிகள் மற்றும் தீயசக்திகள்  எதிர்கொள்ள முன்பே முன்னெச்சரிக்கையுடன் திட்டமிடல் இருந்திருக்க வேண்டும்.
இனி வரும் காலங்களில் அறப்போராட்டத்தை
நேர்த்தியாக நடத்த ஒத்திகை பார்த்து தயாராகி விட்டார்கள்
தமிழ் மாணவ சமுதாயம்  என்றே சொல்லலாம்.
தேவைப்பட்டதை நேர்மையாகவும், அமைதியாகவும்,
பாதுகாப்பாகவும் (உலகிற்கே எடுத்துக்காட்டாய்) ஒற்றுமையாகவும்
அறப்போராட்டம் மூலம் மாணவ இளையசமுதாயம்
செய்து காட்டி வெற்றியும் கண்டு விட்டது 

என்பதே நிதர்சனமான உண்மை.

Wednesday 18 January 2017

#ஜல்லிக்கட்டு

 

அன்று வருத்தத்துடன் பதிவிட்டேன் (Friday, 15 January 2016) .ஜல்லிக்கட்டு என்னும் தலைப்பில். 

இன்று எந்த கட்சியோ, இயக்கமோ தூண்டுதல் இல்லாத, 

அறவழிப் போராட்டம். 

உலகமே ஆதரவு தெரிவிக்கிறது. 

தமிழினம் எத்தனை காலம் பொறுமை காக்கும்.

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு 

என்பதை இன்று கொதித்து கொந்தளிக்கும் இளைஞர்களால்,    

தமிழ் நாட்டில்  எழுச்சி பெற முடியும்

என்பதற்கு இதுவே முதல் உதாரணம்.

இனி பழங்கதை பேசி அரசியல் செய்யும் பழைய தந்திரமெல்லாம் செல்லாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

Friday 6 January 2017

வாழப்பிறந்தவர்கள் Vs சாகப்பிறந்தவர்கள்

வாழப்பிறந்தவர்கள்
பூர்வபுண்ணியம் பலமாக உள்ளவர்கள்.
அன்பான அமைதியான மனைவி மற்றும் மக்கள்.
கயவனை கூட அனுசரித்து காரியம் சாதிப்பர்.
செல்வத்திற்கு தங்குதடை வரவே வராது.
குறிப்பாக, அவர்களுக்கு மன உளைச்சலை தருபவரை
அருகிலேயே அண்ட விட மாட்டார்.
சாகப்பிறந்தவர்கள்
ஜோதிடனை  பார்க்க கூட வக்கிருக்காது.
எதனை செய்தாலும் முன்னேற விடாத,
சதா காலமும் நிந்திக்கும் துணைவி,
கயவன் என தெரிந்தும் அவன் காலில் விழாத குறையாக அவனிடம் யாசிப்பர்.
செல்வம் இவனிடம் வந்தவுடன் சென்றுவிடும்.தங்கவே தங்காது.
இவனை சுற்றிலும் வலுக்கட்டாயமாக இலவசமாக காரியம் சாதிக்கும் நரிகள் கூட்டம் எப்போதும்.இவனுக்கு தவிர்க்க தெரிந்தாலும், இவனால் தவிர்க்க முடியாது.
இருப்பவன் யாருக்கும் தரவேண்டும் என நினைக்க மாட்டான்.
இல்லாதவன் எல்லோருக்கும் தரவேண்டும் என எப்போதும் நினைப்பான்.