Wednesday 31 March 2021

தேர்தல்களம்

 


 

ஓடி ஒளிந்தவனெல்லாம்
ஆடிப்பாடுகின்றனர்.
ஜாதி(தீ), மதம் வெறி
தலைவிரித்து ஆடுகிறது.
காசுக்கும், பொட்டல பிரியாணிக்கும்,
கூட்டம் கூடுகிறது.
நடிகர்களை பார்க்க
கூட்டம் அலைமோதுகிறது.
தேசப்பற்றை யாரிடமும்
பார்க்க முடியவில்லை.

ஜாதி, மதம் பாராமல்,
வேட்பாளர்களை தேர்வு
செய்யாத வரை தேச நலன்
என்பது வெறுமையே...


இறுதியாக...
உங்களுக்கு என்ன வேண்டும் என
யாரும் கேட்கவில்லை. நான் வந்தால்
............................... என உளறி கொட்டி,
கிளறி மூடுவதையே பார்க்க முடிகிறது.