உன் பாட்டன் நான் வாழும் இடம் அருகில் இடம் வாங்கினான்.
உன் அப்பன் அந்த இடத்தில் வீடு கட்டினான்..
நீ வசிக்கும் வீட்டில் என் வேர் ஊடுருவும்
என
என்னை வெட்ட சொல்லி விட்டாயே,
நன்றிகெட்ட மனிதனே ,
நான் வாழ்ந்த இடத்தில், நீ வசிக்க என்னையே அழிக்க துணிந்தவன் நீ.
உன் மூதாதையர்களையும்,எத்தனையோ பறவைகளையும் ,
இந்த பூமியையும் காத்த என்னை அழித்தால் உன் தலைமுறைகள் எப்படி தழைக்கும்?.
நான் இறந்தாலும் விறகாக பயன்படுவேன்.
நீ இறந்தாலும் உன்னை எரிக்கவோ, புதைக்கவோ நான் பயன்படுவேன்.
இறுதியாக உனக்கு ஒன்று சொல்லுகிறேன்.
என் தயவால்தான் நீ...
உன் தயவால் நான் அல்ல...
நீ எந்த மதத்தவனாக இருந்தாலும் எனக்கு அது முக்கியமல்ல...
முதலில் நீ நன்றி மறவாத மனிதனாக இரு.