Wednesday 5 December 2018
Friday 9 November 2018
Saturday 27 October 2018
827 ஆபாச இணையதளங்கள் முடக்கம்! மத்திய அரசு அதிரடி
இணையத்தளத்தின் ஆபத்தை குறித்து
(இணையதளம் பேராபத்து என 22 July 2017)
அன்றே எழுதியிருந்தேன். இன்று நான் பயந்தபடி அனைத்தும் நடந்துவிட்டன. தற்போது இந்த நடவடிக்கை(!). இனி என்ன பயன்?. சிறுமிகள் வன்கொடுமை,கள்ள காதல் (இதற்கு நீதிமன்றம் ஆதரவு வேற), ஆசிரியர் மாணவி,மேலும் பல. இதைத்தானே இந்த கார்ப்பரேட் அரசு எதிர்பார்த்தது. நன்றாக நடந்தது இப்போது முடக்கி என்ன பெரும் பயன் ஏற்பட்ட போகிறது?. மொத்த நாட்டிற்கும் அதன் கலாச்சாரத்திற்கும் சங்கு ஊதிவிட்டு இப்போது வெறும் முடக்கம்.
Monday 3 September 2018
சுவீகாரம்
குழந்தை இல்லையென ஏங்குவர்.
கோவில், குளங்களை சுற்றுவர்.
மருத்துவர்களுக்கு வாரி வழங்குவர்.
சுப நிகழ்ச்சி, சுப காரியங்களை தவிர்ப்பர்.
தம்பதியர் ஒருவரை ஒருவர் குறைகூறி
குடும்ப வெறுமையை அதிகமாக்குவர்.
ஆயிரக்கணக்கில் அனாதைக் குழந்தைகள்
இருந்தாலும் தத்தெடுத்து வளர்க்க
ஒன்றுக்கும் உதவாத சமுதாயத்தை கண்டு அஞ்சுவர்.
அனாதை குழந்தை எந்த ஜாதியோ? ரத்தத்தில் ஜா(தீ)தி!
குழந்தையும் தெய்வமும் ஒன்றென அறியவில்லை.
மனிதம் மரித்தது இந்த இடத்தில்.
சுவீகாரம் எடுத்தவர்களைக் கேளுங்கள்,
அவர்கள் பூமியில் வாழும் காலத்திலேயே
சொர்கத்தை அனுபவிப்பதை கூறுவார்கள்.
இவர்கள் அனுபவிக்கும் துன்பத்திற்கு
இவர்களே பொறுப்பு.
Friday 31 August 2018
Monday 30 July 2018
Tuesday 17 July 2018
இங்கிதம்
இங்கிதம் என்பது தன்னடக்கத்தாலும்,
மற்றவரை மதிக்கத் தெரிந்தவர்களிடம்
இருந்து வருவது.
இங்கிதம் இல்லாதவர்களால் பிறர்க்கு
என்றுமே பிரச்சனைதான்.
மற்றவரை மதிக்கத் தெரிந்தவர்களிடம்
இருந்து வருவது.
இங்கிதம் இல்லாதவர்களால் பிறர்க்கு
என்றுமே பிரச்சனைதான்.
Sunday 3 June 2018
Sunday 20 May 2018
Friday 11 May 2018
Friday 4 May 2018
கீழான மக்கள்
கீழான மக்கள் என்பது ஜாதியை வைத்து பார்க்கவே கூடாது.
அது முற்றிலும் முட்டாள்தனம் மற்றும் அறியாமையே.
மற்றவர் பசியில் இருப்பதை அறிந்து வேலைவாங்குவது,
அல்லது அவருக்கு உணவு படைக்கும் கடமையிருந்தும்,
அதில் கண்டும் காணாமல் இருப்பது போன்ற குணம் உள்ளவர்களே
கீழான மக்கள்.
செல்வச்செழிப்போடு நுனிநாக்கில் பல மொழிகள் பேசினால் அவன் உயர்ந்தவன் என பொருள் கொள்ளக் கூடாது.
சாதாரண உடையில் தாய் மொழி மட்டுமே தெரிந்தவனாயிருந்தாலும்
பிறர் பசியெறிந்து உதவி செய்பவனே உயர்ந்தவன்.
கொடுப்பவனின் கரம் மேலே இருக்கும்.
வாங்குபவனின் கரம் கீழே இருக்கும் என்பார்கள்.
ஆனால் பிறர் பசிக்கு கொடுக்கும் போது
நீ புண்ணியத்தை பெருகிறாய்.
Monday 23 April 2018
Thursday 29 March 2018
Friday 23 March 2018
குழந்தை
குழந்தை வளர்ப்பு..?
அழாதே உன்னை பள்ளிக்கூடத்தில்
கொண்டு போய் விட்டுவிடுவேன் என மிரட்டுவது
குழந்தைக்கு பள்ளிக்கூடத்தின் மீது பயத்தை உருவாக்கும்.
குழந்தைக்கு தேவை அன்பும், அரவணைப்பும் மட்டுமே...
அன்பினால் குழந்தையிடம் நாம் நினைத்ததை
நடத்தி முடிக்கலாம்.
குழந்தையும் தெய்வமும் ஒன்று என
அன்றே சூசகமாக நம் மூதாதையர் கூறி சென்றனர்.
Monday 19 March 2018
தொழில்
தொழில் செய்ய தொழில்நுட்பம்
அவசியம் தெரிந்து இருக்க வேண்டும்.
நாம் தொழில் செய்ய முடிவு செய்து இறங்கிவிட்டால்,
அதில் குடும்பம், நட்பு எதையும்
அதற்கு இடைஞ்சலாக வர
அனுமதிக்கூடாது.
தொழில் என்பது ஆண்மை. ஆளுமை.
அறியாதவன் நடைபிணத்திற்கு சமம்.
அதில் குடும்பம், நட்பு எதையும்
அதற்கு இடைஞ்சலாக வர
அனுமதிக்கூடாது.
தொழில் என்பது ஆண்மை. ஆளுமை.
அறியாதவன் நடைபிணத்திற்கு சமம்.
சமுதாயத்தில் முகம் தொலைந்து போவான்.
நிலைமையை ஏற்படுத்திக்கொண்டாலோ.
நிலைமையில் சிக்கிக்கொண்டாலோ
நீ காலத்தின் பிடியில் கைதியே...
நிலைமையில் சிக்கிக்கொண்டாலோ
நீ காலத்தின் பிடியில் கைதியே...