வருமானம் வரும்போது அதன் அருமை தெரியாமல்,
பிணந்தின்னி கழுகுகள் சுற்றி முகஸ்துதி பாட,
அனைத்து செல்வத்தையும் தொலைத்தது
கூட தப்பில்லை என தோன்றுகிறது.
கடன் இல்லாதவரை யாருமே செல்வந்தன்தான்.
சிறிதும் யோசிக்காமல் கடன் பெற்று விட்டால்,
கடன் வட்டியை குட்டியாக பெற்றுப்போடும்.
குட்டி வளர வளர குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி முற்றிலும் போய்விடும்.
பிறகு வருந்தி என்ன பலன்.